செய்திகள்,முதன்மை செய்திகள் விளையாட்டை விபத்தாக்கிய சிறுமி பலி …

விளையாட்டை விபத்தாக்கிய சிறுமி பலி …

விளையாட்டை விபத்தாக்கிய சிறுமி பலி … post thumbnail image
தோழிகளுடன் விளையாடிக் கொண்டிருந்த 7 வயது சிறுமியின் ஆடையில் தீப்பிடித்து பரிதாபமாக தீயில் கருகி பலியானார்.

ஆண்டிபட்டியில் உள்ள டி.சுப்புலாபுரத்தைச் சேர்ந்தவர் முருகன். இவரது மகள் கௌசல்யா வயது 7. இவர் அதே பகுதியில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்தார். சம்பவத்தன்று சிலுக்குவார்பட்டியில் தோழிகளுடன் சூடம் ஏற்றி விளையாடிக்கொண்டிருந்தார். அப்போது திடீரென கௌசல்யா ஆடையில் தீப்பிடித்தது.

படுகாயம் அடைந்த சிறுமி தேனி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிறுமி மேல்சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது பற்றி ஆண்டிபட்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி