செய்திகள்,முதன்மை செய்திகள் வாடிகனில் தீக்குளித்தவரால் பரபரப்பு…

வாடிகனில் தீக்குளித்தவரால் பரபரப்பு…

வாடிகனில் தீக்குளித்தவரால் பரபரப்பு… post thumbnail image
இத்தாலியில் உள்ள வாடிகன் நகரம் உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்களின் புனித நகரமாகும். இங்கு தினமும் ஏராளமான கிறிஸ்தவர்கள் வந்து போப் ஆண்டவரிடம் ஆசி பெற்று செல்கின்றனர். இத்தாலியின் மைய பகுதியில் அமைந்துள்ள வாடிகன், தன்னாட்சி பெற்ற அரசாக செயல்பட்டு வருகிறது.

இங்கு போப் மாளிகை முன்பாக மிக பெரிய செயின்ட் பீட்டர் வளாகம் அமைந்துள்ளது. இங்கு பாதுகாப்பு பணியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.இந்நிலையில் சுமார் 51 வயது மதிக்கதக்க ஒருவர் நேற்று நீண்ட நேரம் செயின்ட் பீட்டர் வளாகத்தில் இருப்பதை போலீசார் கண்டனர். அவர் பிரார்த்தனையில் ஈடுபட்டிருக்கலாம் என்று அவர்கள் கருதினர். இந்நிலையில் திடீரென அவரது மேல் சட்டை தீப்பிடித்து எரிய தொடங்கியது. சிறிது நேரத்திலேயே அவரது உடல் தீப்பற்றியது.

தீயில் கருகி அவர் அலறுவதை கண்ட 2 போலீசார், விரைந்து சென்று தீயை அணைத்தனர். படுகாயத்துடன் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.அவர் வைத்திருந்த பையில் துண்டு காகிதம் இருந்தது. அதில் தனது மகளின் தொலைபேசி எண்ணை எழுதி இருந்தார். அவரை போலீசார் தொடர்பு கொண்டு விசாரித்து வருகின்றனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி