திரையுலகம்,முதன்மை செய்திகள் குணமடைந்தார் இசைஞானி ….

குணமடைந்தார் இசைஞானி ….

குணமடைந்தார் இசைஞானி …. post thumbnail image
இசைஞானி இளையராஜா அவர்கள் உடல்நல குறைவு காரணமாக சென்னையில் உள்ள அப்பல்லோ தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் இன்று காலை பிரசாத் ஸ்டுடியோவிற்கு வந்த இளையராஜா, தனது புதிய படத்திற்கான பாடல் இசையமைப்பில் ஈடுபட்டிருந்தார்.

அதன் பின் டிசம்பர் 28ம் தேதி நடைபெற உள்ள விழாவிற்காக பாடல் கம்போசிங்கில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது அவருக்கு லேசான நெஞ்சு வலி ஏற்பட்டது. இதனையடுத்து அவர் அப்பல்லோ தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

டாக்டர்கள் அவருக்கு சிகிச்சை அளித்தன. இப்போது அவர் நலமாக இருக்கிறார் என்று அப்பல்லோ மருத்துவமனை டாக்டர்கள் தெரிவித்துள்ளது. இந்நிலையில், இளையராஜாவின் உடல் நிலை குறித்து அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகத்திடம் விசாரித்த போது இளையராஜாவுக்கு லேசான நெஞ்சுவலிதான் என்றும், இப்போது ஐசியுவில் நலமாக இருக்கிறார் என்றும் கூறினார்.

இதயத் துடிப்பு கண்காணிக்கப்பட்டு, கொலஸ்ட்ரால் அளவு குறித்த சோதனைகள் செய்துள்ளதாக டாக்டர்கள் கூறினார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி