செய்திகள்,முதன்மை செய்திகள் கஞ்சா விற்ற பெண்கள் …

கஞ்சா விற்ற பெண்கள் …

கஞ்சா விற்ற பெண்கள் … post thumbnail image
தேனி மாவட்டம் சின்ன மனூர் ரைஸ்மில் தெருவில் உள்ள வீட்டில் கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் வினோஜி தலைமையில் போலீசார் அப்பகுதியில் உள்ள இன்பராஜ் என்பவரது வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது அந்த வீட்டில் இன்பராஜின் மனைவி அன்னலட்சுமி (வயது27), கம்பம் வடக்குபட்டியை சேர்ந்த மாயாண்டி என்பவரின் மனைவி ராக்கம்மாள் (50) ஆகிய 2 பேர் 16 கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருப்பதை போலீசார் கண்டு பிடித்தனர். இருவரையும் கைது செய்த போலீசார் 16 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.1½ லட்சம் ஆகும்.

சின்ன மனூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி யதில் கம்பம் நகரில் வசிக்கும் ராக்கம்மாள் ஆந்திர மாநிலத்தில் இருந்து கம்பத்துக்கு கஞ்சா வாங்கி தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ளவர்களுக்கு சில்லரையாக விற்க கொடுத்து வந்தது தெரிய வந்தது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி