செய்திகள்,முதன்மை செய்திகள் முதல்வரின் எதிர்ப்பு…

முதல்வரின் எதிர்ப்பு…

முதல்வரின் எதிர்ப்பு… post thumbnail image

திரிகோணமலையில் இன்று துவங்கும் இலங்கையுடனான கூட்டுப்பயிற்சி முகாமில் இந்தியக்க கடற்படை பங்கேற்கக் கூடாது என்று முதலமைச்சர் ஜெயலலதா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இந்திய கப்பல்கள் மற்றும் கடற்படையினரை உடனடியாக அரசு திரும்பப் பெற வேண்டும் என்று ஜெயலலதா கூறியுள்ளார். இலங்கை கடற்படையுடனான கூட்டுப்பயிற்சி தமிழர்களின் உணர்வுகளை அவமதிக்கும் செயல் என்று கூறிய அவர் இலங்கை வீரர்களுக்கு வெலிங்டனில் பயிற்சி தருவதை நிறுத்த ஏற்கனவே எழுதியுள்ளதாகவும் கூறியுள்ளார்.

தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல், அவர்களது படகுகள் சிறைபிடிப்பு தொடர்ந்து கொண்டே இருக்கிறது. தற்போதைய கூட்டுப்பயிற்சி நடவடிக்கை தமிழர்களின் உணர்வுகளை மீண்டும் அவமதிக்கும் செயல் என்றும் அவர் கூறியுள்ளார். ராணுவ ஒத்துழைப்பு குறித்த கொள்கையை உடனே மறுஆய்வு செய்ய ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி