உங்களுக்கு தான் தெரியுமே ஒருவர் வெற்றி அடைந்து விட்டால் கோலிவுட்டில் மதிப்பே தனி. தனுஷ் கொடுக்கும் ஆலோசனையில் மனிதர் தயாரிப்பாளர்களின் நச்சரிப்பில் இருந்து தப்பித்துக் கொண்டிருக்கிறார்.
வாய்ப்புகளை அவர் தேடி போன காலம் போய், வாய்ப்புகள் வந்து குவிந்து கொண்டிருக்கின்றன, கைவசம் பல படங்களை வைத்துள்ளார். சமீபத்தில், ஒரு பெரிய திரைப்பட உற்பத்தி அலுவலகத்தில் இருந்து கதாநாயனாக நடிக்க சிவ கார்த்திகேயனுக்கு அழைப்பு வந்ததாகவும், சம்பளம் குறைவாக இருந்ததால், அதை அவர் ஏற்க மறுத்து விட்டதாகவும், பரபரப்பு தகவல்கள் உலா வருகின்றன. ஆனால் எப்போதும் போல் இந்த முறையும் அவர் அதை மறுத்துள்ளார்.
அவர் கொடுத்த விளக்கம் இது தான் “குறிப்பிட்ட அலுவலகத்தில் இருந்து, யாரும் என்னை அணுக இல்லை இது ஒரு தவறான செய்தி யார் இப்படி எல்லாம் தகவல்களை பரப்பிகின்றனர். சம்பளத்துக்காக எந்த ஒரு நல்ல திரைப்பட வாய்ப்புகளையும் இழப்பதற்கு நான் தயாரில்லை. எனக்கு சம்பளம் முக்கியமில்லை; கதைதான் முக்கியம்” என்று ஒப்பிக்கிறார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி