தமிழர்களுக்கு எதிராக கருத்து சொல்வதென்றால் இலங்கை அமைச்சர் விமல் வீரவன்சவை மிஞ்ச ஆளில்லை. மாரவில என்ற இடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் போட்ட அணுகுண்டு…
இலங்கையை ஆக்கிரமிக்க அமெரிக்கா முயற்சிக்கிறது. அதை சாதிப்பதற்கு பிரிவினைவாதிகளுடன் அது கூட்டணி அமைத்திருக்கிறது. இலங்கையின் பூகோள அமைப்பும் அதன் இயற்கை வளங்களும் அமெரிக்க நலன்களுக்கு முக்கியமானவை, இதனால் நாட்டை சீர்குலைக்க முனையும் பிரிவினைவாத அமைப்புகளை அமெரிக்கா சார்ந்திருந்து நாட்டை கைப்பற்ற முயற்சிக்கிறது.
வடக்கிலிருந்து இராணுவத்தை அகற்ற வேண்டுமென்று அமெரிக்காவும் மற்றவர்களும் தொடர்ச்சியாக வலியுறுத்துவதற்கு இதுதான் காரணம். அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் தமிழ்த் தேசியக் .கூட்டமைப்பு ஆகியவை வடக்கிலிருந்து இராணுவத்தை அகற்றிவிட்டு பிரிவினைவாதத்தை மீண்டும் விதைத்து நாட்டில் நிலையற்ற தன்மையை ஏற்படுத்த முயற்சிக்கின்றன என்றார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
Comments are closed.