அரசியல்,முதன்மை செய்திகள் டக்ளசு,கருணா இப்ப சந்தோசமா?

டக்ளசு,கருணா இப்ப சந்தோசமா?

Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper,Tamilnadu politics,kollywood,Tamil Cinema

தமிழர் பகுதிகளான யாழ்ப்பாணம், வவுனியா உள்ளிட்ட வட இலங்கையில் செய்து வரும் நிவாரணப் பணிகள், மனிதாபிமானப் பணிகளை குறைத்துக் கொள்ளுமாறும், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள தங்களது பணியாளர்களை வெளியேற்றுமாறும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திற்கு இலங்கை அரசு திடீர் உத்தரவு போட்டுள்ளது.

இதேபோல கடந்த ஆண்டு இலங்கை அரசு நெருக்கடி கொடுத்ததால் கிழக்கு மாகாணத்தில் வைத்திருந்த தங்களது அலுவலகத்தை காலி செய்ய நேரிட்டது செஞ்சிலுவைச் சங்கம். தற்போது வட இலங்கையிலும், பணிகளைக் குறைக்குமாறு இலங்கை அரசு நெருக்கஆரம்பித்திருப்பதால் அங்கிருந்தும் செஞ்சிலுவைச் சங்கம் அகல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து இலங்கைக்கான செஞ்சிலுவைச் சங்க செய்தித் தொடர்பாளர் சரசி விஜரத்னே கூறுகையில், யாழ்ப்பாணம், வவுனியாவில் உள்ள அலுவலகங்களைக் காலி செய்து விட்டு கொழும்பில் உள்ள தலைமை அலுவலகத்திலிருந்து செயல்படுமாறு எங்களுக்கு உத்தரவு வந்துள்ளது.

அரசின் இந்த முடிவுக்கு என்ன காரணம் என்பது தெரிவிக்கப்படவில்லை. இதுகுறித்து இலங்கை அரசுடன் பேசவுள்ளோம் என்றார் அவர்.

போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு உரிய நிவாரண உதவிகளை வழங்குவதிலும், இடம் பெயர்ந்து முகாம்களில் தங்கியுள்ளவர்களை மறுகுடியேற்றம் செய்வதிலும் இலங்கை அரசு மெத்தனமாக செயல்பட்டு வருவதாக பலமான குற்றச்சாட்டு உள்ளது. இந்த நிலையில் மனிதாபிமான அடிப்படையில் செஞ்சிலுவைச் சங்கத்தினர் செய்து வரும் உதவிகளையும் நிறுத்த தற்போது இலங்கை அரசு இறங்கியுள்ளது தமிழர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி