செய்திகள்,முதன்மை செய்திகள் சிங்கப்பூரில் குழந்தையின் உயிரைக் காப்பாற்றிய 2 தமிழர்களுக்கு விருது!…

சிங்கப்பூரில் குழந்தையின் உயிரைக் காப்பாற்றிய 2 தமிழர்களுக்கு விருது!…

சிங்கப்பூரில் குழந்தையின் உயிரைக் காப்பாற்றிய 2 தமிழர்களுக்கு விருது!… post thumbnail image
சிங்கப்பூர்:-சிங்கப்பூரின் கிழக்கு ஜூராங் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் 2-வது மாடியில் உள்ள ஒரு வீட்டில் உள்ள 3 வயது குழந்தை பால்கனி ஓரம் நின்று தனது ஐபேடில் விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது, பால்கனி தடுப்புக் கம்பியின் வெளிப்புறமாக ஐபேடு விழுந்துவிட்டது. அதனை எடுக்க கம்பிக்குள் நுழைந்த குழந்தை உள்ளே சிக்கிக்கொண்டது.

சுவற்றுக்கும் கம்பித் தடுப்புக்கும் இடையில் உள்ள பகுதிக்குள் விழுந்த குழந்தையின் உடல் முழுவதும் மாடியில் இருந்து கீழே தொங்கியது. தலைப்பகுதி மட்டும் இடைவெளிக்குள் சிக்கிக்கொண்ட குழந்தை வெளியே வர வழியறியாமல் கதறி அழ ஆரம்பித்தது. குழந்தையின் அலறலைக் கேட்ட அக்கம்பக்கத்தினர் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தனர். அப்போது, அருகாமையில் சாலை பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டிருந்த தமிழக தொழிலாளர்கள் சண்முக நாதன் (35), முத்துக்குமார் (24) ஆகியோர் இந்த காட்சியை கண்டனர். உடனடியாக விரைந்து சென்ற அவர்கள் 2-வது மாடிக்கு ஏறிச் சென்று குழந்தையை பத்திரமாக மீட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் ஏணியின் உதவியுடன் குழந்தையை கீழே இறக்கி காப்பாற்றினர். இந்த அவசர உதவியை செய்த சண்முக நாதன், முத்துக்குமார் இருவருக்கும் சிங்கப்பூர் அரசின் உள்நாட்டு பாதுகாப்பு படை வழங்கும் உத்வேக விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி