செய்திகள்,திரையுலகம் தெலுங்கு நடிகர்கள் மீது நடிகை ராதிகாஆப்தே பாய்ச்சல்!…

தெலுங்கு நடிகர்கள் மீது நடிகை ராதிகாஆப்தே பாய்ச்சல்!…

தெலுங்கு நடிகர்கள் மீது நடிகை ராதிகாஆப்தே பாய்ச்சல்!… post thumbnail image
சென்னை:-தமிழில் தோனி, ஆல் இன் ஆல் அழகுராஜா உள்ளிட்ட படங்களில் நடிகை ராதிகா ஆப்தே நடித்து உள்ளார். தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்து இருக்கிறார். ராதிகா ஆப்தேவின் ஆபாச படங்கள் சமீபத்தில் இணைய தளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தின. அரை நிர்வாணமாக இப்படங்களில் அவர் இருந்தார்.
ஆபாச படத்தில் இருப்பது நான் அல்ல என்று ராதிகா ஆப்தே மறுத்தார். மார்பிங்கில் அந்த படங்களை உருவாக்கி இருந்ததாகவும் குற்றம் சாட்டினார்.

இந்நிலையில் ஆங்கில படமொன்றில் அரை நிர்வாணமாக நடிக்கிறார். கதைக்கு தேவைப்பட்டதால் அப்படி நடித்தேன் என்று கூறினார். தெலுங்கு பட உலகையும் சாடி உள்ளார். இது குறித்து ராதிகா ஆப்தே அளித்த பேட்டி வருமாறு:– இந்தி, தமிழ், மலையாளம், தெலுங்கு, மராத்தி உள்ளிட்ட பலமொழிகளில் நடித்து விட்டேன். ஆனால் நான் ரொம்ப கஷ்டப்பட்டது தெலுங்கு பட உலகில் தான்.

ஆணாதிக்கம் மிகுந்ததாக தெலுங்கு திரை உலகம் இருக்கிறது. நடிகைகளை அங்குள்ள நடிகர்களும் மற்றவர்களும் மதிப்பதே இல்லை. நடிகைகளை மரியாதையுடன் நடத்துவதும் இல்லை. எனவே தெலுங்கு படங்களில் இனிமேல் நடிப்பது இல்லை என்று முடிவு செய்து இருக்கிறேன். இவ்வாறு ராதிகா ஆப்தே கூறினார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி