அரசியல்,செய்திகள்,முதன்மை செய்திகள் இந்திய பயணத்தை முடித்துக்கொண்டு சவுதி அரேபியா புறப்பட்டார் ஒபாமா!…

இந்திய பயணத்தை முடித்துக்கொண்டு சவுதி அரேபியா புறப்பட்டார் ஒபாமா!…

இந்திய பயணத்தை முடித்துக்கொண்டு சவுதி அரேபியா புறப்பட்டார் ஒபாமா!… post thumbnail image
புதுடெல்லி:-மூன்று நாள் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள அமெரிக்க அதிபர் ஒபாமா, நமது நாட்டில் நடைபெற்ற பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டார். தனது பயணத்தின் இறுதி கட்டமாக சிறி கோட்டையில் கூடியிருந்த 2000-க்கும் மேற்பட்ட மக்கள் முன் அவர் உரையாற்றினார். பின்னர் தனது இந்திய பயணத்தை நிறைவு செய்த அவர், பிற்பகல் 2.00 மணியளவில் தனி விமானத்தில் சவுதி அரேபியாவுக்கு புறப்பட்டார்.

விமானத்தில் புறப்படும் முன் ஒபாமா மற்றும் மிச்சல் இருவரும் இந்திய மக்களிடம் விடை பெறும் வகையில் இரு கைகளையும் கூப்பி வணக்கம் தெரிவித்ததுடன், கையசைத்து டாட்டா காட்டினர்.
முன்னதாக மறக்கமுடியாத பயணத்தை ஏற்படுத்தி தந்த நரேந்திர மோடிக்கும், சிறப்பான வரவேற்பு அளித்த இந்திய மக்களுக்கும் மிக்க நன்றி என ஒபாமா தனது டுவிட்டரில் டுவிட் செய்தது குறிப்பிடத்தக்கது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி