செய்திகள்,பொருளாதாரம்,முதன்மை செய்திகள் ரிசர்வ் வங்கி கவர்னருக்கு இங்கிலாந்து பத்திரிகை விருது!…

ரிசர்வ் வங்கி கவர்னருக்கு இங்கிலாந்து பத்திரிகை விருது!…

ரிசர்வ் வங்கி கவர்னருக்கு இங்கிலாந்து பத்திரிகை விருது!… post thumbnail image
லண்டன்:-இங்கிலாந்து பத்திரிகையான சென்டிரல் பேங்கிங், 2015ம் ஆண்டுக்கான விருதுகளில் இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜனுக்கு சிறந்த கவர்னர் விருது அறிவித்துள்ளது. இந்த விருது லண்டனில் மார்ச் மாதம் 12-ந்தேதி நடைபெறும் விழாவில் வழங்கப்படுகிறது.

இதுகுறித்து அந்த பத்திரிகையின் ஆசிரியர் கிறிஸ்டோபர் ஜெப்ரி கூறும்போது, இந்திய பொருளாதார நிலைமைகளுக்கு ஆதாரமான காரணங்கள் பற்றிய அவரது ஆழமான புரிதலும், செறிவான பகுப்பாய்வுகளும், இதன் அடிப்படையில் மேற்கொண்ட கொள்கை நடவடிக்கைகளும் இந்திய பொருளாதாரம் பற்றிய சிந்தனை மாற்றங்களில் குறிப்பிடத்தகுந்த பங்களிப்பை செய்துள்ளன என்றார்.

ரகுராம் ராஜன் கூறும்போது, சிறந்த வங்கி கவர்னர் விருதுக்கு என்னை தேர்வு செய்ததை கவுரவமாக கருதுகிறேன். இந்த அங்கீகாரம் இந்திய பொருளாதார நிலைத்தன்மைக்காக பாடுபட்ட ரிசர்வ் வங்கி மற்றும் அதன் ஊழியர்களை சாரும் என்றார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி