செய்திகள்,திரையுலகம் நடிகர் அஜித், பாலசந்தர் இறுதி அஞ்சலியை புறக்கணித்தது ஏன்?…

நடிகர் அஜித், பாலசந்தர் இறுதி அஞ்சலியை புறக்கணித்தது ஏன்?…

நடிகர் அஜித், பாலசந்தர் இறுதி அஞ்சலியை புறக்கணித்தது ஏன்?… post thumbnail image
சென்னை:-தமிழ் சினிமாவின் இயக்குனர் சிகரம் உடல் நிலை சரியில்லாமல் காலமானார். அவருக்கு திரை உலகை சார்ந்த முக்கிய நடிகர்கள் தங்கள் இறுதி அஞ்சலியை செலுத்தினார்கள். ஆனால், நடிகர் அஜித் மட்டும் ஏன் வரவில்லை என்ற கேள்வி எல்லோர் மனதிலும் எழும்பியுள்ளது. எந்த ஒரு பொது நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளாமல் இருப்பாரே தவிர இந்த மாதிரி துக்க நிகழ்ச்சிக்கு வராமல் இருக்க மாட்டார். கவிஞர் வாலியின் இறப்பின்போது கலந்திருந்தார்.

அவர் வராதது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் என்னை அறிந்தால் கடைசி கட்ட படப்பிடிப்பு சென்னையில் தான் நடக்கிறது. ஒரு மூத்த கலைஞருக்கு அவர் மரியாதை செலுத்தி இருக்கலாமே என்ற ஆதங்கம் ரசிகர்கள் மனதில் உள்ளது என்பது அப்பட்டமான உண்மை, இருந்தாலும் அவரின் சூழ்நிலை என்ன என்று தெரியாமல் எதுவும் சொல்லிவிடவும் முடியாது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி