செய்திகள்,திரையுலகம் நடிகர் தனுஷின் குரலை கேட்க வைத்த டெக்னாலஜி!…

நடிகர் தனுஷின் குரலை கேட்க வைத்த டெக்னாலஜி!…

நடிகர் தனுஷின் குரலை கேட்க வைத்த டெக்னாலஜி!… post thumbnail image
சென்னை:-நடிகர் தனுஷ் தான் நடித்த புதுக்கோட்டையிலிருந்து சரவணன் என்ற படத்தில் நாட்டு சரக்கு நச்சின்னுதான் இருக்கு… என்ற பாடல் மூலம் பின்னணி பாடகராக உருவெடுத்தார். அதைத் தொடர்ந்து, ஆயிரத்தில் ஒருவன் படத்தில், உன் மேல ஆசைதான், மயக்கம் என்ன, படத்தில் ஓட ஓட, 3 படத்தில், ஒய் திஸ் கொலவெறி என இதுவரை 15 பாடல்கள் வரை பாடியிருக்கிறார்.

அப்படி அவர் பாடிய பல பாடல்கள் ஹிட்டாகியிருக்கின்றன. அதனால் மற்ற ஹீரோக்கள் நடிக்கும் படங்களிலும் தனுசுக்கு பாட வாய்ப்பளித்து வருகிறார்கள். இதுபற்றி தனுஷ் கூறும்போது, இந்த சினிமாவில் எஸ்.பி.பி போன்ற முன்னணி பாடகர்கள் பாடியிருக்கிறார்கள். ஆனால் இப்போது என் போன்றோரும் பாடுகிறோம். ஆனால் எனது குரல் கேட்பது போல் இருப்பதற்கு காரணம் டெக்னாலஜிதான்.

குரலில் இருக்கிற குறைகளை மாற்றி, வித்தியாசமான அவுட்புட் கொடுக்கிறார்கள். அதனால்தான், நான் பாடும் பாடல்கள் கேட்பதற்கு இனிமையாக உளளது. அந்த வகையில், பிரபலமான இசைக்கலைஞர்கள் இருந்த இந்த சினிமாவில் நானும் ஒரு பாடகராக வலம் வருகிறேன் என்பது மகிழ்ச்சியாக உள்ளது என்கிறார் தனுஷ்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி