செய்திகள்,திரையுலகம் கடைதிறப்பு விளம்பரங்களில் நடிக்க மாட்டேன் – நயன்தாரா!…

கடைதிறப்பு விளம்பரங்களில் நடிக்க மாட்டேன் – நயன்தாரா!…

கடைதிறப்பு விளம்பரங்களில் நடிக்க மாட்டேன் – நயன்தாரா!… post thumbnail image
சென்னை:-நடிகைகள் நகைக்கடை, ஜவுளிக்கடை விளம்பர படங்களில் நடித்து லட்சம் லட்சமாய் சம்பாதிக்கிறார்கள். இந்தி நடிகைகள் விளம்பர படங்களில் நடிக்க கோடிக்கணக்கில் வாங்குகிறார்கள். சினிமாவை விட விளம்பர படங்கள் மூலம் கணிசமாய் சம்பாதிக்கிறார்கள். தமிழ் நடிகைகள் பலர் நகைக்கடை மற்றும் ஜவுளிக்கடையை திறந்து வைத்து பணம் வாங்குகிறார்.

ஆனால் நயன்தாராவுக்கு இது போன்று நடிப்பதில் ஆர்வம் இல்லை. இது குறித்து அவர் கூறியதாவது:–கடை விளம்பரங்களில் கலந்து கொள்வதில் எனக்கு விருப்பம் கிடையாது. கடை திறப்பு நிகழ்ச்சிகளுக்கு நிறைய நேரம் உட்கார வைக்கிறார்கள். நம்மை வைத்து கொண்டே பூஜை நடத்துகின்றனர். பிறகு போட்டோ எடுக்கிறார்கள். நான்கு, ஐந்து தடவை வெவ்வேறு சேலைகளை மாற்றி மாற்றி உடுத்து வைத்து படம் எடுக்கிறார்கள்.

அந்த படங்களை வைத்து விளம்பர பலகைகள் தயார் செய்து ஹோர்டிங் வைக்கிறார்கள். ஒரு வருடம் அந்த ஹோர்டிங்குகள் அப்படியே இருக்கும். இதனால் பல சிக்கல்கள் ஏற்படுகின்றன. எனவேதான் கடை விளம்பர நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை தவிர்க்கிறேன். ஓய்வு நேரத்தை என் வீட்டில் கழிக்கிறேன். இவ்வாறு நயன்தாரா கூறினார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி