செய்திகள்,திரையுலகம் குடிகாரன், ஆட்டோ டிரைவராக இருந்து தொழிலதிபராக உயர்ந்த நடிகர் தலைவாசல் விஜய்!…

குடிகாரன், ஆட்டோ டிரைவராக இருந்து தொழிலதிபராக உயர்ந்த நடிகர் தலைவாசல் விஜய்!…

குடிகாரன், ஆட்டோ டிரைவராக இருந்து தொழிலதிபராக உயர்ந்த நடிகர் தலைவாசல் விஜய்!… post thumbnail image
சென்னை:-‘தலைவாசல்’ படத்தின் மூலம் நடிகரானவர் விஜய். தொலைந்து போனவர்கள் என்ற சீரியலில் குடிகாரனாக நடித்தார். அதைப்பார்த்து தேவர் மகன், காதலுக்கு மரியாதை படத்தில் குடிகாரராக நடித்தார். அன்று முதல் அவருக்கு கிடைத்த கேரக்டர் எல்லாமே குடிகாரன், ஆட்டோ டிரைவர்தான். இப்போது பூஜை படத்தில் தொழிலதிபர் கேரக்டரில் நடித்திருக்கிறார்.இதுபற்றி அவர் கூறியதாவது:

தேவர்மகன், தொலைந்து போனவர்கள், காதலுக்கு மரியாதை படங்களில் குடிகாரனக நடித்தேன். அது முதல் குடிகாரன் கேரக்டர்னா, ஆட்டோ டிரைவர் கேரக்டர்னா என்னை தேட ஆரம்பிச்சாங்க. ஒரே மாதிரியான கேரக்டர்கள்ல நடிச்சு போரடிச்சி போய் உட்கார்ந்திருந்த நேரத்தில் மலையாளத்தில் யுகபுருஷன் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. மலையாளிகள் போற்றும் ஸ்ரீ நாராயணகுருவின் வாழ்க்கை வரலாற்று படம். அதில் நான் நாராயணகுருவாக நடிச்சேன். மம்முட்டி எனது சீடராக நடித்தார். கேரள அரசின் சிறந்த நடிகருக்கான விருது பெற்றேன். இது என் வாழ்க்கையை புரட்டி போட்டது. நிறைய மலையாள வாய்ப்புகள் வந்தது. இதுவரை 60 படங்களுக்கு மேல் நடித்து முடித்து விட்டேன்.

இப்போதுதான் என்னை தமிழ் சினிமா குடிகாரன், ஆட்டோ டிரைவரிலிருந்து தொழில் அதிபர் புரமோஷன் கொடுத்திருக்கிறது. பூஜை படத்தில் நானும் ஜெயபிரகாசும் தொழிலதிபராக நடிச்சிருக்கோம். அனேகன் படத்தில் ஒரு புதுமையான கேரக்டர்ல நடிச்சிருக்கேன். கடல் குதிரைகள் என்ற படத்தில் அணுஉலை எதிர்பாளராக நடிச்சிருக்கேன். தட்டயன் மரத்து தமிழ் ரீமேக்கில் முஸ்லிம் பெரியவராக நடிக்கிறேன். இப்போதுதான் எனக்கு விதவிதமான கேரக்டர்கள் வருகிறது. இதை எனது இரண்டாவது ரவுண்ட் என்றும் சொல்லலாம். என்கிறார் தலைவாசல் விஜய்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி