செய்திகள்,திரையுலகம் கவிதாயினி ஆனார் ‘சுப்பிரமணியபுரம்’ ஸ்வாதி!…

கவிதாயினி ஆனார் ‘சுப்பிரமணியபுரம்’ ஸ்வாதி!…

கவிதாயினி ஆனார் ‘சுப்பிரமணியபுரம்’ ஸ்வாதி!… post thumbnail image
சென்னை:-‘சுப்பிரமணியபுரம்’ ஸ்வாதி இப்போது பிசியான நடிகை இல்லைதான் ஆனாலும் மொழிக்கு ஒரு படத்தில் நடித்துக் கொண்டுதான் இருக்கிறார். அவர் நடித்துள்ள அமளி துமளி தமிழ் படம் விரைவில் வெளிவர இருக்கிறது. தற்போது யட்சன் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். தெலுங்கில் கார்த்திகேயாவில் நடிக்கிறார். டபுள் பரேல் என்ற மலையாளப்படத்தில் நடித்து வருகிறார்.

ஸ்வாதி இப்போது கவிதாயினி என்ற புது அவதாரத்தை எடுத்திருக்கிறார். படப்பிடிப்பு இடைவெளியில் நிறைய ஆங்கில கவிதைகள் எழுதுகிறார். அதனை பிற்காலத்தில் புத்தகமாக போடும் திட்டத்தில் இருக்கிறார். அவர் எழுதும் ஒரு சில கவிதைகளை தனது பேஸ்புக் டுவிட்டரில் போடுகிறார். சமீபத்தில் ரெஸ் அண்ட் சன் என்ற கவிதையை வெளியிட்டார். இது பரவலான பாராட்டை பெற்றதும். இப்போது முன்பைவிட அதிக தீவிரத்துடன் கவிதைகளை எழுதித் தள்ளிக்கொண்டிருக்கிறார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி