செய்திகள்,திரையுலகம் 12 மணி நேரத்தில் எடுக்கப்படும் திரைப்படம்!…

12 மணி நேரத்தில் எடுக்கப்படும் திரைப்படம்!…

12 மணி நேரத்தில் எடுக்கப்படும் திரைப்படம்!… post thumbnail image
சென்னை:-ஜெயலக்ஷ்மி மூவீஸ் என்ற பட நிறுவனம் சார்பாக வி.எஸ்.மோகன்குமார் தயாரிக்கும் இந்த படத்திற்கு ‘நடு இரவு’ என்று பெயரிட்டுள்ளனர். இந்த படத்தில் நடிப்பவர்கள் அனைவரும் புதுமுகங்களே. கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் புதுகை மாரிசா. இசையை ரமேஷ் கிருஷ்ணா கவனிக்கிறார். உலகநாதன் ஒளிப்பதிவு செய்கிறார்.

படம் பற்றி இயக்குனர் புதுகை மாரிசாவிடம் கேட்டபோது, இம்மாதம் 19ம் தேதி படப்பிடிப்பை நடத்த இருக்கிறோம். மாலை 6 மணிக்கு படப்பிடிப்பை தொடங்கி மறுநாள் காலை 6 மணிக்குள் அதாவது 12 மணி நேரத்தில் முழு படப்பிடிப்பையும் நடத்தி முடிக்க உள்ளோம்.பேய் சம்மந்தப்பட்ட கதை என்பதால் முற்றிலும் புதுமுகங்களை வைத்து எடுக்கிறோம். பேய் என்பதால் தெரிந்த முகங்கள் எதுவும் தேவையில்லை. எந்த பேயாக இருந்தாலும் திகில் இருந்தால் போதும் என்பது என் கருத்து. முக்கிய வேடத்தில் மோனிகா என்ற சிறுமி நடிக்கிறார் என்றார்.இந்த படத்தின் தொடக்க விழா தயாரிப்பாளர் சங்க தலைவர் கே.ஆர் மற்றும் ஜி.சேகரன், இயக்குனர் சக்திசிதம்பரம் ஆகியோர் தலைமையில் இன்று ஏவிஎம் ஸ்டுடியோவில் நடைபெற்றது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி