செய்திகள்,திரையுலகம் ஏஞ்சலினா-பிராட் பிட் திருமணம் பிரான்சில் நடந்தது!…

ஏஞ்சலினா-பிராட் பிட் திருமணம் பிரான்சில் நடந்தது!…

ஏஞ்சலினா-பிராட் பிட் திருமணம் பிரான்சில் நடந்தது!… post thumbnail image
நியூயார்க்:-ஹாலிவுட்டின் ‘கோல்டன் ஜோடி’ என்று அழைக்கப்படும் ஏஞ்சலினா-பிராட்பிட் தம்பதியர் கடந்த வாரம் சனிக்கிழமை அன்று பிரான்சின் சட்டு மிரவேல் பகுதியின் சிறிய தேவாலயம் ஒன்றில் தனிப்பட்டமுறையில் திருமணம் செய்துகொண்டுள்ளனர். குடும்பத்தினரும், நண்பர்களும் மட்டுமே கலந்துகொண்ட இந்தத் திருமண விழா முன்னிட்ட திருமண அனுமதி ஒன்றினை அவர்கள் ஏற்கனவே கலிபோர்னிய மாகாண நீதிபதி ஒருரிடம் பெற்றிருந்தனர். இந்த நீதிபதி முன்னிலையில் இந்தத் திருமணம் நடந்தேறியுள்ளது.

இந்தத் திருமணத்தில் இந்தத் தம்பதியினரின் ஆறு குழந்தைகளும் பங்கேற்றனர். அவர்களது மகன்கள் மாடோக்ஸ் மற்றும் பக்ஸ் உடன்வர, மகள்கள் சஹாராவும், விவியேன்னும் பூக்கள் தூவ, ஷிலோவும், நாக்சும் மோதிரங்களை எடுத்துத்தர இவர்களின் திருமணம் இனிதே நடந்தேறியதாக அவர்களது செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி