அரசியல்,செய்திகள்,முதன்மை செய்திகள் பெட்ரோல் விலை குறைப்பு – பிரதமர் மோடி அறிவிப்பு!..

பெட்ரோல் விலை குறைப்பு – பிரதமர் மோடி அறிவிப்பு!..

பெட்ரோல் விலை குறைப்பு – பிரதமர் மோடி அறிவிப்பு!.. post thumbnail image
புதுடெல்லி :- பெட்ரோலியம் பொருட்கள் மீது விதிக்கப்படும் வரிகள் மூலம் மத்திய அரசுக்கு அதிக அளவில் வருவாய் கிடைக்கிறது. கடந்த ஆண்டு இந்த வரி விதிப்பு மத்திய அரசுக்கு ரூ.64,335 கோடியை பெற்று கொடுத்தது. நடப்பாண்டில் பெட்ரோலியம் பொருட்கள் மீதான சுங்கவரி வருவாய் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் ஈராக் உள்நாட்டு போரால் சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள கச்சா எண்ணை விலை உயர்வு, இந்தியாவில் பெட்ரோலியம் பொருட்கள் விலையை அதிகரிக்க செய்யும் என்று கூறுப்படுகிறது.

ஆனால் பிரதமர் நரேந்திரமோடி பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் உள்ளிட்டவைகளின் விலையை உயர்த்த அனுமதிக்க கூடாது என்பதில் உறுதியாக உள்ளார். அதற்கு பதில் பெட்ரோலியம் பொருட்கள் மீதான சிறப்பு சுங்க வரியை ரத்து செய்வது பற்றி ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.

தற்போது பெட்ரோல் மீது சிறப்பு சுங்க வரியாக லிட்டருக்கு ரூ. 9.48ம், டீசலுக்கு ரூ. 3.56ம் விதிக்கப்படுகிறது. இதை ரத்து செய்யும் பட்சத்தில் பெட்ரோல் விலையில் ரூ.1, டீசல் விலையில் ரூ. 2 குறைக்க முடியும்.

எனவே சிறப்பு வரி ரத்தாகும் பட்சத்தில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ஒரு ரூபாய் குறைய வாய்ப்புள்ளது. டீசலை தற்போது ரூ. 2 இழப்பில் தான் எண்ணை நிறுவனங்கள் விற்று வருகின்றன. எனவே டீசல் விலை குறையாது என்று பெட்ரோலிய அமைச்சக உயர் அதிகாரி ஒருவர் கூறினார். தற்போது பல்வேறு வகை வரிகள் மூலம் ஒரு லிட்டர் பெட்ரோல் விற்பனையில் மத்திய அரசுக்கு ரூ. 23 கிடைப்பது குறிப்பிடத்தக்கது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி