செய்திகள்,பொருளாதாரம்,முதன்மை செய்திகள் நாளை புனித ரமலான் நோன்பு தொடங்குவதாக அறிவிப்பு!…

நாளை புனித ரமலான் நோன்பு தொடங்குவதாக அறிவிப்பு!…

நாளை புனித ரமலான் நோன்பு தொடங்குவதாக அறிவிப்பு!… post thumbnail image
துபாய்:-வளைகுடா நாடுகளில் நாளை புனித ரமலான் நோன்பு தொடங்குவதாக நேற்று அறிவிக்கப்பட்டது. சந்திர மாதத் தொடக்கத்தைக் குறிக்கும் புதிய பிறையைப் பார்வையிடும் ஒன்றியத்தின் நிலவு காணும் குழு ஐக்கிய அரபு நாடுகளில் ரமலான் நோன்பின் தொடக்க நாளாக ஞாயிற்றுக்கிழமையை நேற்று அறிவித்தது.

சவுதி அரேபியாவில் செயல்படும் ஷுரா கவுன்சிலும் ஷாபான் மாதத்தின் கடைசி நாளாக இன்றைய நாளைக் குறிப்பிட்டு இதற்கு அடுத்து வரும் ரமலான் நோன்பு நாளை தொடங்குவதாகக் குறிப்பிட்டுள்ளது. பஹ்ரைனில் செயல்பட்டுவரும் இஸ்லாமிய விவரங்களுக்கான சுப்ரீம் கவுன்சில் இதே விபரத்தை தங்கள் நாட்டு மக்களுக்கு வெளியிட்டுள்ளது.

கத்தாரிலும் பிறை சந்திரனைக் காண்பதற்காக அவ்காப் மற்றும் இஸ்லாமிய விவகார அமைச்சகத்தால் நியமிக்கப்பட்டுள்ள குழுவானது நாளை ஜூன் 29ம் தேதி ரமலான் மாதத்தின் முதல் நாளாகக் கணக்கிடப்படும் என்று தெரிவித்துள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி