செய்திகள் ராஜஸ்தானில் நடந்த குழந்தை திருமணவிழா!…

ராஜஸ்தானில் நடந்த குழந்தை திருமணவிழா!…

ராஜஸ்தானில் நடந்த குழந்தை திருமணவிழா!… post thumbnail image
ராஜஸ்தான்:-ராஜஸ்தான் மாநிலம் கிஷன்கார் பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் 20க்கும் மேற்பட்ட ஜோடிகளுக்கு குழந்தைகள் திருமணம் நடந்தது. அவர்களுக்கு 7 முதல் 16 வயதுவரைதான் இருக்கும்.இந்த திருமணம் மிகப்பெரிய விழாவாக எடுக்கபட்டு உள்ளது. இதை லோக்கல் போட்டோகிராபர் சங்கர் புரி படம் பிடித்து உள்ளார்.

இந்த விழாவில் கிராமத்தை சேர்ந்த அதிகமான பேர் கலந்து கொண்டு உள்ளனர்.இதனால் அவரால் ஒன்றும் செய்ய முடியவில்லை.இது குறித்து சங்கர் புரி கூறியதாவது:- எனக்கு திருமணம் குறித்த தகவல் தாமதமாகத்தான் கிடைத்தது உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவித்தேன்.உடனடியாக சம்பவ பகுதிக்கு விரைந்து சென்றேன். அங்கு கிராமமே விழாக்கோலம் பூண்டு இருந்தது.

அங்கு கிராமத்தினர் ஆடல் பாடல் நிகழ்ச்சியில் ஈடுபட்டு இருந்தனர். விவரம் அறியாத குழந்தைகளுக்கு புத்தாடை அணிவித்து திருமண கோலத்தில் நிறுத்தி இருந்தனர்.லோக்கல் போலீசார் வந்தார்கள் ஆனால் துரதிர்ஷடவசமாக அவர்களால் திருமணத்தை தடுத்து நிறுத்தமுடியவில்லை.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி