செய்திகள்,திரையுலகம் பெண்களால் வெறுப்புதான் ஏற்பட்டது என பிரபுதேவா புலம்பல்!…

பெண்களால் வெறுப்புதான் ஏற்பட்டது என பிரபுதேவா புலம்பல்!…

பெண்களால் வெறுப்புதான் ஏற்பட்டது என பிரபுதேவா புலம்பல்!… post thumbnail image
சென்னை:-இந்தித் திரையுலகில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக விளங்கி வருபவர் பிரபுதேவா.இவர் திரையுலகில் அறிமுகமான காலத்திலிருந்தே எண்ணற்ற கிசுகிசுக்களில் அடிபட்டவர். தன் குழுவில் பணிபுரிந்த ரமலத்தை காதல் திருமணம் செய்து கொண்டு குழந்தைகள் பெற்ற பின்னும் அதை மறைத்தே வந்தவர்.

பல வருடங்களுக்குப் பிறகுதான் தனக்கு திருமணமானதையே தெரிவித்தார். சில வருடங்களுக்கு முன் பிரபுதேவாவும், நயன்தாராவும் தீவிரமாகக் காதலித்து வந்தனர். பிரபுதேவாவை திருமணம் செய்து கொள்வதற்காக கிறிஸ்துவரான நயன்தாரா இந்து மதத்திற்கு மாறினார்.அதன் பின் என்ன நடந்தோ தெரியவில்லை. பிரபுதேவாவும், நயன்தாராவும் திருமணமும் செய்து கொள்ளாமல் திடீரெனப் பிரிந்தனர். சமீபத்திய பேட்டி ஒன்றில் பெண்களால் தான் மிகவும் வெறுத்துப் போய் விட்டதாகக் கூறியிருக்கிறார் பிரபுதேவா.

கடந்த சில வருடங்களாக தனிமையில்தான் வாழ்ந்து வருவதாகவும், இனி அவரது வாழ்க்கையில் எந்த பெண் துணையுமே தேவையில்லை என்றும் கூறியிருக்கிறார். காதல் மனம் புரிந்த மனைவியை பிரபுதேவா வெறுத்தாலும் தனது மகன்களுடன் மட்டும் எப்போதும் சந்தோஷமாகச் சுற்றி வருகிறார். அவர்கள் மீது அளவு கடந்த பாசம் வைத்திருக்கிறார். விரைவில் அவர்களுடன் வெளிநாடு சுற்றுப் பயணம் மேற் கொள்ளவும் திட்டமிட்டுள்ளாராம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி