செய்திகள்,விளையாட்டு மன அழுத்தம் காரணமாக ஓய்வு அறிவித்த கிரிக்கெட் வீரர்!…

மன அழுத்தம் காரணமாக ஓய்வு அறிவித்த கிரிக்கெட் வீரர்!…

மன அழுத்தம் காரணமாக ஓய்வு அறிவித்த கிரிக்கெட் வீரர்!… post thumbnail image
ஆஸ்திரேலியா:-ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் லுக் போமர் பெஞ்ச். இவர் ஆஸ்திரேலிய அணிக்காக ஒரு 20 ஓவர் போட்டியில் விளையாடி உள்ளார். ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப், பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிகளில் இடம் பெற்று இருந்தார்.

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் போது மதுபாரில் தகராறில் ஈடுபட்டதாக அவர் சர்ச்சையில் சிக்கி இருந்தார். இந்நிலையில் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக லுக் போமர்பெஞ்ச் திடீரென அறிவித்தார். மன அழுத்தம் நோய் காரணமாக இந்த முடிவை எடுத்து உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.மன அழுத்தத்துக்கு உரிய சிகிச்சைகள் எடுத்து விரைவில் குணமடைய அடைவேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி