செய்திகள் 11 மாணவிகளை கற்பழித்த ஆசிரியருக்கு தூக்கு!…

11 மாணவிகளை கற்பழித்த ஆசிரியருக்கு தூக்கு!…

11 மாணவிகளை கற்பழித்த ஆசிரியருக்கு தூக்கு!… post thumbnail image
பெய்ஜிங்:-சீனாவில் தொடக்கப்பள்ளி ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் கோயா டோஷெங். இவருக்கு வயது 59. கடந்த 2012ம் ஆண்டு இவர் வுகு நகரில் உள்ள பள்ளியில் 14 வயதுக்குட்பட்ட 11 சிறுமிகளை கற்பழித்துள்ளார். இவ்வழக்கு மீதான விசாரணை சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

இவ்வழக்கை விசாரித்த நீதிபதி ஈவிரக்கமற்ற செயலில் ஈடுபட்ட அந்த ஆசிரியருக்கு மரணதண்டனை விதித்து தீர்ப்பளித்தது. மேலும் இது போன்ற செயல்களில் ஈடுபடும் ஆசிரியர்களின் நடத்தைக்கு கண்டனம் தெரிவித்தது. மேலும் பள்ளிக் குழந்தைகளின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி