செய்திகள்,திரையுலகம் விஜய்யின் முடிவால் அதிர்ச்சியடைந்த சசிகுமார்!…

விஜய்யின் முடிவால் அதிர்ச்சியடைந்த சசிகுமார்!…

விஜய்யின் முடிவால் அதிர்ச்சியடைந்த சசிகுமார்!… post thumbnail image
சென்னை:-ஒருசில பிரச்சனைகளுக்கு பின்னர் வெற்றிகரமாக ரிலீஸ் ஆன நிமிர்ந்து நில் படத்தின் வசூல் திருப்திகரமாக இருப்பதால் இயக்குனர் சமுத்திரக்கனி மிகவும் உற்சாகமாக இருக்கின்றாராம். முதலில் இந்த கதையை விஜய்யை மனதில் வைத்து எழுதியதாகவும், விஜய்யின் கால்ஷிட் கிடைக்காத காரணத்தினால் ஜெயம் ரவியை வைத்து எடுத்ததாகவும் கூறும் விஜய், அடுத்து ஒரு கதையை தயார் செய்து விஜய்யை நேரில் சந்தித்ததாக கூறப்படுகிறது.

நிமிர்ந்து நில் படத்தை பார்த்து சமுத்திரக்கனியை பாராடிய விஜய், அவர் கூறிய ஆக்ஷன் கதையை கேட்டு ரொம்பவே இம்ப்ரஸ் ஆகிவிட்டாராம். கட்டாயம் நாம் இருவரும் சேர்ந்து இந்த படத்தை பண்ணலாம் ஆனால், முருகதாஸ், சிம்புதேவன் படங்கள் முடியும் வரை உங்களால் பொறுத்திருக்க முடியுமா? என்று கேட்டுள்ளார்.விஜய் கால்ஷீட் கிடைக்கும் என்றால் கண்டிப்பாக எத்தனை வருடங்கள் வேண்டுமானாலும் பொறுத்திருக்க தயார் என்று கூறி வருகிறார் சமுத்திரக்கனி.

இந்த இடைவெளியில் சசிகுமாரும் சமுத்திரக்கனியும் இணைந்து இன்னொரு படத்தை கொடுக்க முடிவு செய்திருக்கிறார்கள். சசிகுமார் ஏற்கனவே பாலா படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.விஜய்யை இயக்குவதற்கு ஏற்கனவே சுசீந்திரன், சசிகுமார் மற்றும் அட்லி ஆகியோர் கியூவில் காத்துக் கொண்டிருக்கும்போது சமுத்திரக்கனி அந்த வாய்ப்பை தட்டிப்பறித்து விடுவாரோ என மேற்கண்ட மூவரும் அதிர்ச்சியில் உள்ளனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி