செய்திகள்,திரையுலகம் ஏர்போர்ட்டில் துப்பாக்கி குண்டுகளுடன் சிக்கிய நடிகை!…

ஏர்போர்ட்டில் துப்பாக்கி குண்டுகளுடன் சிக்கிய நடிகை!…

ஏர்போர்ட்டில் துப்பாக்கி குண்டுகளுடன் சிக்கிய நடிகை!… post thumbnail image
சென்னை:-தமிழில், தடையறத் தாக்க, புத்தகம் படங்களில் நடித்தவர் ரகுல் பிரீத் சிங். இந்தி, தெலுங்கு படங்களிலும் நடித்துவரும் இவர், இப்போது கவுதம் கார்த்திக் ஜோடியாக என்னமோ ஏதோ படத்தில் நடிக்கிறார்.

இரண்டு நாட்களுக்கு முன் விமானத்தில் டெல்லி சென்ற இவரை சோதனையிட்ட போலீஸ் அதிகாரிகள், கைப் பையில் துப்பாக்கிக் குண்டுகள் இருப்பதைப் பார்த்தனர். இதையடுத்து அவரை தனியாக அழைத்துச் சென்று கேள்வி மேல் கேள்வி கேட்டனர். துப்பாக்கிக் குண்டுகளை விமானத்தில் கொண்டு சென்றது பெருங்குற்றம் என்று கூறினர். ரகுல், அது எப்படி வந்தது என்று தெரியவில்லை என்றார். ரகுலின் அப்பா ராணுவ அதிகாரி. விமான நிலைய அதிகாரிகள் அவரை வரவழைத்தனர். அப்போது அந்த துப்பாக்கிக் குண்டுகளை சோதனையிட்டபோது போலியானவை என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவரை எச்சரித்து விமான நிலைய போலீசார் விடுவித்தனர்.

இதுபற்றி ரகுல் பிரீத் சிங் கூறும்போது, விமான நிலையத்தில் இருந்த ஒவ்வொரு நிமிடமும் தவித்துவிட்டேன். படப்படப்பில் கண்ணீர் பொத்துக்கொண்டு வந்தது. இது இந்தியாவில் தயாரிக்கப்பட்ட குண்டு அல்ல என்று கூறினர். எனக்கு அதிர்ச்சி. சில நாட்களுக்கு முன் பாங்காக்கில் இருந்து வந்திருந்தேன். அப்போது யாராவது என் ஹேண்ட் பேக்கில் இதை போட்டிருப்பார்களோ என்றுகூட நினைத்தேன்.பிறகு அது போலி என்று சொன்ன பிறகுதான் ஞாபகத்துக்கு வந்தது. தமிழில், ஒரு படத்தில் ரிவால்வர் வைத்திருப்பது போல நடித்திருந்தேன். அதில் பயன்படுத்திய போலி குண்டுகளை நினைவுக்காக எட்டு மாதத்துக்கு முன் வைத்தேன். அவைதான் இவை என்பது தெரிந்தது. பிறகு அந்த படத்தின் டிவிடியை அனுப்பி வையுங்கள் என்று போலீஸ்காரர்கள் சொன்னார்கள். இப்போது நினைத்தாலும் படப்படப்பாக இருக்கிறது என்றார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி