செய்திகள்,திரையுலகம் ஜீவாவுடன் துளசி வெளிநாடு செல்ல ராதா தடை…

ஜீவாவுடன் துளசி வெளிநாடு செல்ல ராதா தடை…

ஜீவாவுடன் துளசி வெளிநாடு செல்ல ராதா தடை… post thumbnail image
சென்னை:-என்றென்றும் புன்னகை படத்தை அடுத்து ஜீவா நடிக்கும் ‘யான்‘ படம் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. இப்படத்தின் சில பாடல் காட்சிகளும், சண்டைக்காட்சிகளும் வட ஆப்பிரிக்காவில் உள்ள மொராக்கோ என்ற நாட்டில் படப்பிடிப்பு நடத்த படக்குழுவினர் முடிவு செய்தனர். ஆனால் அந்த நாட்டின் அனுமதி கிடைப்பதில் தாமதம் ஆனதால் படப்பிடிப்பு ஒத்தி வைக்கப்பட்டிருந்தது.

தற்போது மொரக்கோ நாட்டின் அனுமதியும், விசாவும் கிடைத்துவிட்டதால் படக்குழுவினர் சுறுசுறுப்பு அடைந்தனர். விரைவில் ஜீவா, துளசி உள்பட படக்குழுவினர் அனைவரும் மொராக்கோ நாடு செல்ல உள்ளனர். இந்த நேரத்தில் துளசியின் அம்மா நடிகை ராதா தனது மகளுக்கு துணையாக தானும் மொரக்கோ வருவதாக கூறி, தனக்கு டிக்கெட் ஏற்பாடு செய்யும்படி கூறினாராம். இதற்கு தயாரிப்பாளர் ஒப்புக்கொள்ளாததால், கடுப்பான ராதா, மகளை வெளிநாட்டு படப்பிடிப்பிற்கு தனியாக அனுப்ப முடியாது என்று கறாராக கூறிவிட்டதால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ஜீவா தனிப்பட்ட முறையில் ராதாவிடம் பேசியும் பயனில்லை. துளசியும் தன் அம்மாவை எவ்வளவோ சமாதானப்படுத்தியும் ராதா யார் பேச்சையும் கேட்காமல் பிடிவாதமாக இருப்பதால் படக்குழுவினர் என்ன செய்வது என தெரியாமல் குழப்பம் அடைந்து உள்ளனர். வெளிநாட்டு படப்பிடிப்புக்கு செல்லும் படக்குழுவில் துளசி மட்டுமே பெண் என்பதால் ராதா தனியாக மகளை அனுப்ப தயங்குவதாக அவரது தரப்பில் இருந்து கூறப்படுகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி