செய்திகள்,திரையுலகம் முத்த காட்சியில் நடிக்க மறுத்த சமந்தா…

முத்த காட்சியில் நடிக்க மறுத்த சமந்தா…

முத்த காட்சியில் நடிக்க மறுத்த சமந்தா… post thumbnail image
ஹைதராபாத்:-சமந்தாவும், நாக சைதன்யாவும் ‘ஆட்டோ நகர் சூர்யா’ என்ற படத்தில் ஜோடியாக நடிக்கின்றனர்.

இவர்கள் ஏற்கனவே ‘ஏமாயா கேசவா’ என்ற படத்தில் இணைந்து நடித்தார்கள். அப்படம் 2010–ல் ரிலீசானது. இந்த படம் மூலம்தான் சமந்தா தெலுங்கு பட உலகில் அறிமுகமானார். அதில் முத்த காட்சி இடம் பெற்று இருந்தது. நாக சைதன்யாவை முத்தமிட வேண்டும் என்று டைரக்டர் சொன்னதும் மறுப்பு சொல்லாமல் நடித்தார்.

ஆனால் தற்போது அதே நாக சைதன்யாவை முத்தமிட மறுத்து விட்டார். இதுகுறித்து நாக சைதன்யா கூறும்போது, ‘ஆட்டோ நகர் சூர்யா படத்தில் முத்த காட்சியில் நடிக்கும்படி சமந்தாவிடம் வற்புறுத்தினோம். ஆனால் அவர் மறுத்துவிட்டார்’ என்றார்.தமிழ், தெலுங்குபட உலகில் சமந்தா முன்னணி நடிகையாக உயர்ந்துள்ளார். பெரிய ஹீரோக்களுடனும் ஜோடியாக நடிக்கிறார். நடிகர் சித்தார்த்தை காதலிக்கவும் செய்கிறார். இதனாலேயே முத்த காட்சிகளை தவிர்க்கிறார் என்கின்றனர் நெருக்கமானவர்கள்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி