செய்திகள் பலாத்காரம் செய்ய முயன்றவரை கொலை செய்த பெண்…

பலாத்காரம் செய்ய முயன்றவரை கொலை செய்த பெண்…

பலாத்காரம் செய்ய முயன்றவரை கொலை செய்த பெண்… post thumbnail image
திருவண்ணாமலை:-திருவண்ணாமலை மாவட்டம் போளூர், புளியாங்குப்பத்தைச் சேர்ந்த ஆண்டி(30), விறகு வெட்டும் தொழிலாளி. இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. கடந்த 12ம் தேதி ஆண்டி முட்நாட்டூர் கிராம வனப்பகுதி வழியாக நடந்து வந்துள்ளார். எதிரே வந்த சந்திராவை(45) என்பவரை வழிமறித்து பலாத்காரம் செய்ய முயன்றார்.

அவரிடம் இருந்து தப்புவதற்காக சந்திரா காலால் எட்டி உதைத்துள்ளார். தடுமாறி கீழே விழுந்த ஆண்டி மீது பெரிய கல்லை சந்திரா போட்டுள்ளார்.பலத்த காயம் அடைந்த ஆண்டி சிறிது நேரத்திலேயே இறந்து விட்டார். ஆண்டியை சந்திராதான் கொலை செய்தார் என்று கருதிய உறவினர்கள், சடலத்தை எடுத்துச் சென்று சந்திரா வீட்டின் முன்பு வைத்து நியாயம் கேட்டுள்ளனர். இதையடுத்து சந்திராவின் குடும்பத்தினர் வெளியூருக்கு சென்றுவிட்டனர்.

இதனால் ஆண்டியின் சடலம் கடந்த 4 நாட்களாக அங்கேயே கிடந்தது. இதுகுறித்து ஜம்னாமரத்தூர் போலீசில் ஆண்டியின் தம்பி அமாவாசை நேற்று முன்தினம் கொடுத்த புகாரில் போலீசார் வழக்குபதிவு செய்து தலைமறைவாக இருந்த சந்திராவை கைது செய்தனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி