விளையாட்டு பெண்களுக்கான ‘துப்பாக்கி’ கண்டுப்பிடிப்பு!…

பெண்களுக்கான ‘துப்பாக்கி’ கண்டுப்பிடிப்பு!…

பெண்களுக்கான ‘துப்பாக்கி’ கண்டுப்பிடிப்பு!… post thumbnail image

டெல்லியில் கடந்த 2012 ஆம் ஆண்டு நிர்பயா என்ற பெண்ணிற்கு ஒரு கற்பழிப்புக் கும்பலால் ஏற்பட்ட கொடூர மரணம் கான்பூர் துப்பாக்கித் தொழிற்சாலையில் ஐஓஎப் பெண்களுக்கான கைத்துப்பாக்கியை வடிவமைக்கக் காரணமாக இருந்தது.

டைட்டானியம் அலாயில் 500 கிராம் எடையில், 32 திறனுடன் கூடிய இலகுரக துப்பாக்கி இங்கு பெண்களுக்கென முதன் முதலாக தயாரிக்கப்பட்டு கடந்த 6ஆம் தேதி வெளியிடப்பட்டது. 1,22,360 ரூபாய் விலை கொண்ட இந்தத் துப்பாக்கி ‘நிர்பீ’க் என்று பெயரிடப்பட்டுள்ளது.

இந்தத் துப்பாக்கியைப் பெறுவதற்கு ஏற்கனவே 20 பேர் முன்பதிவு செய்துள்ளன. பதிவு செய்துள்ளவர்களில் 80 சதவிகிதத்தினர் பெண்கள் என்று ஐஓஎப்பின் பொது மேலாளர் அப்துல் ஹமீது கூறினார்.

மேற்கத்திய தயாரிப்பு நிறுவனங்களான வெப்ஸ்லி&அம்ப;ஸ்காட், ஸ்மித்&அம்ப;வெஸ்ஸன் போன்றவற்றின் நிபுணர்களால் அவர்களின் தயாரிப்புகளை ஒத்த இந்தியக் கலப்பு என்று இந்தத் துப்பாக்கி அறிவிக்கப்பட்டுள்ளது. சிறிய அளவிலான இந்தத் துப்பாக்கியின் எளிய அமைப்பும், வேலைத்திறனும் பெண்களின் கைப்பையில் வைத்துச் செல்லும் அளவில் வசதியானதாக இருக்கும் என்றன.

ஆபத்தான நேரங்களில் துப்பாக்கி வைத்திருக்கும் பெண்கள் விரைந்து செயல்பட்டு தங்களின் பாதுகாப்பை அதிகப்படுத்திக் கொள்ளமுடியும் என்று அருண்குமார் என்ற மூத்த காவல்துறை அதிகாரி கூறினர்.

பிஸ்டலைப் போல் இல்லாமல் தொடர்ந்து ஆறு முறை பயன்படுத்தக்கூடிய வசதி இதில் இருப்பதால் குறிவைத்து சுடும்போது தவறுகள் நிகழவும் இதில் வாய்ப்புகள் இல்லை என்றும் அவர் கூறினார். பெண் வாடிக்கையாளர்களையும் மனதில் கொண்டு கவர்ச்சிகரமாக வடிவமைக்கப்பட்ட வெல்வெட் பெட்டிகளில் பொருத்தி இந்த நிர்பீக் துப்பாக்கிகளை கான்பூர் துப்பாக்கித் தொழிற்சாலை விற்பனைக்கு வெளியிட்டுள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி