திரையுலகம்,முதன்மை செய்திகள் இங்க பாத்தீங்கனா சார்…5 கோடி…தான்…

இங்க பாத்தீங்கனா சார்…5 கோடி…தான்…

இங்க பாத்தீங்கனா சார்…5 கோடி…தான்… post thumbnail image
துருவ நட்சத்திரம் திரை படத்திற்காக வாங்கிய முன்தொகையான ஐந்து கோடியை கவுதம் மேனனிடம் திருப்பிக் கொடுத்துள்ளார் நடிகர் சூர்யா. கவுதம் மேனன் இயக்கத்தில் துருவ நட்சத்திரம் படத்தில் நடிப்பதாக இருந்தார் சூர்யா. ஆனால் கதை மற்றும் தேவையில்லாத கால தாமதத்தால் அவருக்கும் கவுதம் மேனனுக்கும் ஒத்துப் போகாததால், ஒப்பந்தம் செய்யப்பட்ட அந்த திரைப்படத்திலிருந்து விலகிக் கொள்வதாக நடிகர் சூர்யா சில தினங்களுக்கு முன் அறிவித்தார். இதை தொடர்ந்து அவர் 10 கோடியை திருப்பி தந்தார் 20 கோடியை திருப்பி தந்தார் என்று தினமும் ஏதாவது ஒரு செய்தி வலய வந்து கொண்டிருந்தது. இந்த நிலையில் கவுதம் மேனனிடம் வாங்கிய முன் தொகையை திருப்பித் தந்துவிட்டார். ஆனால் அவர் முன்தொகையுடன் கூடுதலாக பெரும் தொகையைத் தந்து விட்டதாக இன்னொருசெய்தி தீயாக கிளம்பியது. வாங்கிய முன்தொகையை தந்துவிட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்த சூர்யா, கவுதம் மேனனை வீட்டுக்கே வரவழைத்து அந்தத் தொகையை முழுவதுமாகக் கொடுத்துவிட்டார், கவுதம் மேனனுக்காக காத்திருந்ததில் அவருக்கு பல கோடி ரூபாய் இழப்பு இருந்தாலும் வாங்கிய முன்தொகைக்கு மேல் கூடுதலாக அவர் 5 கோடி கொடுத்ததாக வந்த செய்திகளில் உண்மையில்லை என்று சூர்யா தரப்பு தெளிவுப்படுத்தியுள்ளனர். மேலும் இது போன்ற பொய்யான பெருமைகளை சூர்யா என்றுமே விரும்பியதுமில்லை என்று அடக்கி வாசிக்கின்றனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி