அரசியல்,முதன்மை செய்திகள் பிரபாகரன் விசயத்தில் இலங்கை போடும் ஆட்டம்

பிரபாகரன் விசயத்தில் இலங்கை போடும் ஆட்டம்

prabhakaran

உடல் நலமின்றி படுத்த படுக்கையாக இருக்கும் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாளைப் பார்க்க, பிரபாகரனின் சகோதர சகோதரிகளுக்கு இலங்கை அரசு அனுமதி மறுத்துள்ளது.

திவயின என்ற சிங்கள ஊடகம் இச் செய்தியை வெளியிட்டுள்ளது.

உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ள பார்வதியம்மாள் வெளிநாட்டிலுள்ள தனது குழந்தைகள், குடும்பத்தினரை சந்திக்க விரும்பினார்.

இதையடுத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம்,
பிரபாகரனின் மூத்த சகோதரி வினோதினி ராஜரத்னம், இளைய சகோதரி மற்றும் சகோதரர் ஆகியோரை இலங்கைக்குள் வர அனுமதியளிக்குமாறு அரசுக்குக் கோரிக்கை விடுத்தார்.

ஆனால், இவர்கள் இலங்கைக்குள் வந்து வல்வெட்டித்துறை பகுதியில் பிரபாகரன் சகாக்களை சந்திக்க உள்ளதாக இலங்கை உளவுப் பிரிவினர் எச்சரித்ததாகவும், இதையடுத்து இவர்கள் இலங்கைக்கு வர அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி