காரைக்குடி அருகே போலீஸ்போல் நடித்து இளம்பெண் கற்பழிப்பு!…

காரைக்குடி:-சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள தானாவயல் பகுதியைச்சேர்ந்தவர் மெலிண்டா (வயது 25) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கு ஏற்கனவே திருமணமாகி விட்டது. கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரிடம் இருந்து மெலிண்டா விவாகரத்து பெற்று தனது தாய் வீட்டில் வசித்து வந்தார். மெலிண்டா, காரைக்குடியில் உள்ள ஒரு கடையில் வேலை பார்த்து வந்தார். அப்போது அவருக்கும், அதே பகுதியைச்சேர்ந்த ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து காதலை வளர்த்து வந்துள்ளனர்.

நேற்று மாலை காதலனுடன் மெலிண்டா மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றார். காரைக்குடி–புதுக்கோட்டை ரோட்டில் உள்ள ஆவுடைபொய்கை என்ற இடத்தில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு காதலர்கள் பேசி கொண்டு இருந்தனர். இந்த இடம் ஆள்நடமாட்டம் இல்லாத காட்டுப்பகுதியாகும்.மெலிண்டா தனது காதலனுடன் பேசி கொண்டு இருந்தபோது காக்கி பேண்ட் அணிந்து 2 பேர் வந்தனர். அவர்கள் காதலர்களிடம் தங்களை போலீஸ் என்று அறிமுகப்படுத்தி கொண்டனர்.
ஆள்நடமாட்டம் இல்லாத பகுதிகளில் நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்று மிரட்டிய மர்ம ஆசாமிகள், மெலிண்டாவிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று கூறி உள்ளனர். ஆனால் இதற்கு காதலன் எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து அவர்கள் காதலனை தாக்கி விட்டு மெலிண்டாவை வலுக்கட்டாயமாக அழைத்து சென்றனர்.இதனால் பதட்டம் அடைந்த காதலன் இது குறித்து செட்டிநாடு போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளார். அப்போது போலீசார் யாரையும் விசாரணைக்கு அழைத்து வரவில்லை என தெரிவித்தனர். இதையடுத்து மெலிண்டா கடத்தப்பட்டது தெரியவந்தது. புகாரின் பேரில் போலீசாரும் மெலிண்டாவை தேடி வந்தனர்.

இந்த நிலையில் இன்று அதிகாலை மெலிண்டாவை காரைக்குடி புதிய பஸ் நிலையத்தில் இறக்கி விட்டு மர்ம வாலிபர்கள் தப்பினர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று மெலிண்டாவை மீட்டனர்.அவரிடம் விசாரணை நடத்தியதில், போலீஸ் போல் நடித்து கடத்தி சென்ற வாலிபர்கள் என்னை கொடூரமான முறையில் கற்பழித்தனர். பின்னர் அதிகாலையில் பஸ் நிலையத்தில் இறக்கி விட்டு சென்றனர் என தெரிவித்ததாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.இந்த சம்பவம் தொடர்பாக செட்டிநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து இளம் பெண்ணை போலீஸ் என்று கூறி கடத்தி சென்று கற்பழித்த கயவர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

1 year ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

1 year ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

1 year ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

1 year ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

2 years ago