என்னை நடிக்க விடாம துன்புறுத்தினார் – வடிவேலுவின் உண்மைமுகத்தை கிழித்த காமெடி நடிகர் பெஞ்சமின்..!

காமெடி நடிகர் பெஞ்சமினை எல்லோருக்கும் தெரிந்திருக்கும். இயக்குனர் சேரன் இயக்கத்தில், பார்த்திபன், முரளி, வடிவேலு கூட்டணியில் குறைந்த பட்ஜெட்டில் உருவாகி மிகப்பெரிய ஹிட் அடித்த திரைப்டபம் “வெற்றிக்கொடிகட்டு” இந்த திரைப்படத்தின் மூலம் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானவர் தான் நடிகர் பெஞ்சமின்.

சமீபத்தில், சில தொலைக்காட்சிகளுக்கு பேட்டி கொடுத்து வந்துள்ள இவர் ஒரு பேட்டியில் வெற்றிக்கொடிகட்டு படத்தில் நடித்த அனுபவத்தை பற்றி கேட்டபோது அவர் பார்த்த வடிவேலுவின் சுயரூபத்தை பற்றி விளக்கியுள்ளார்.

அவர் கூறியதாவது, கே.பாலச்சந்தரின் நடிப்புப் பட்டறையில் நடித்துக்கொண்டிருந்த என்னை ஒரு நாடக அரங்கேற்றத்தின் போது இயக்குனர் சேரன் பார்த்துவிட்டு வெற்றிக்கொடி கட்டு படத்தில் நடிக்க வரச் சொல்லியிருந்தார்.சேரன் சார் சொன்னமாறியே நானும் வெற்றிக்கொடிகட்டு படப்பிடிப்புக்கு சென்றேன். என்னை, 18 நாட்கள் ஒரு புளிய மரத்து அடியில் நாற்காலியைப் போட்டு உட்கார வைத்து விட்டார். எந்த காட்சியிலும் நடிக்க அழைக்கவில்லை.

ஏன் சார் என்று காரணம் கேட்டதற்கு, வடிவேலு பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார் உங்களுடைய காட்சியும் அவருடைய காட்சியும் ஒரே நாளில் எடுக்கப்படவேண்டும். அதனால் கொஞ்சம் வெயிட் பண்ணுங்க வடிவேலு நாளைக்கு வந்து விடுவார் என கூறினார்.

வடிவேலு வராததால் 18 நாட்கள் பெஞ்சமினை ஒரு புளிய மரத்தடியில் உட்கார வைத்திருக்கிறார் இயக்குனர் சேரன். ஒருவழியாக வடிவேலு படப்பிடிப்புக்கு வந்தவுடன் எங்களுக்கு இடையேயான காட்சி எடுக்கப்பட்டது.அப்போது, என்னை நடிக்க விடாமல் வடிவேலு தனது முக பாவனையால் கிண்டல் செய்ததார். அதனால், நான் வடிவேலுவை பார்த்து திட்ட வேண்டிய காட்சி கிட்டத்தட்ட 5 ரீல் பெட்டிகளுக்கு மேல் வீணாக்கப்பட்டது.

மேலும், அதன் மதிப்பு மட்டும் 60 ஆயிரம் ரூபாய், கடைசியில் நடிகர் பார்த்திபனின் உதவியுடன் வடிவேலுவை அந்த இடத்தை விட்டு அப்புறப்படுத்திவிட்டு பின் வடிவேலுவை திட்டுவது போல இருந்த காட்சியை படமாக்கினோம்.இவ்வாறு தான் ஒரு புதுமுக நடிகர் என்றும் பாராமல் என்னை நீ திட்டி விடுவாயா?? திட்டி விட்டு உயிரோடு ஊருக்கு போய்டுவியா..? என்ற தொணியில் மிரட்டி என்னை பயமுறுத்தி பல டேக்குகள் வாங்க வைத்து 60 ஆயிரம் ரூபாய் வரை வீணடித்து விட்டார் அந்த ஒரு காட்சிக்காக.

அனைவரும் ரசித்து பார்த்த அந்த நகைச்சுவை காட்சிக்கு பின் இவ்வளவு பெரிய சம்பவம் உள்ளதா..? என இந்த பேட்டியை பார்த்தபின் அனைவரும் ஆச்சரியப்பட்டும், பெஞ்சமினுக்காக பரிதாபப்பட்டும் வருகின்றனர்.சமீப காலமாக, வடிவேலு மீதான புகார்கள் நாளுக்கு நாள் வந்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது நடிகர் பெஞ்சமினின் புகாரும் தற்போதுதீயாக பரவி வருகின்றது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

தமிழன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

1 year ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

1 year ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

1 year ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

1 year ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

2 years ago