60 பேருடன் உல்லாசம்: கைதான நிதி நிறுவன அதிபர் பரபரப்பு வாக்குமூலம்!…

தர்மபுரி:-தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு மந்தைவெளி பகுதியை சேர்ந்தவர் சிவராஜ் (42). நிதி நிறுவன அதிபரான இவர் பல பெண்களை அனுபவித்து அவர்களுக்கு தெரியாமலேயே அதை செல்போன் மூலம் வீடியோ எடுத்து உள்ளார்.இது போல் அவர் சுமார் 60க்கும் மேற்பட்ட பெண்களுடன் உல்லாசமாக இருந்ததாக தெரிகிறது. இந்நிலையில் அவரது செல்போன் திடீரென பழுதானதால் அதை சர்வீஸ் சென்டருக்கு கொண்டு சென்றார். அங்கு வைத்து பார்த்த போது சிவராஜ் பல பெண்களுடன் உல்லாசமாக இருந்தது தெரியவந்தது. செல்போன் சர்வீஸ் கடைக்காரர் இதை சிவராஜிக்கு தெரியாமல் எடுத்து வெளியில் பரவவிட்டார். பாலக்கோடு பகுதி முழுவதும் இந்த ஆபாச காட்சிகள் பரவியது. இதையடுத்து கிராம நிர்வாக அதிகாரி கொடுத்த புகாரின் பேரில் சிவராஜ் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.பின்னர் அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது அவர் போலீசில் கொடுத்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:–

நிதி நிறுவனம் வைத்து நடத்தி வரும் என்னிடம் ஒரு நாள் பெல்ரம்பட்டியை சேர்ந்த ஒரு பெண் வட்டிக்கு பணம் வாங்க வந்தார். அந்த பெண் அடிக்கடி வந்து சென்றதால் அவருடன் எனக்கு நெருக்கமான பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் அடிக்கடி பல பெண்களை அழைத்து வந்து எனக்கு அறிமுகம் செய்து வைத்தார்.நானும் அவர்களுக்கு வட்டிக்கு பணம் கொடுத்தேன். அப்போது வந்த சில பெண்கள் வட்டியை குறைக்க சொல்லி கேட்டார்கள். நான் அதற்கு எனக்கு ஏதாவது தருவீர்களா? என்று கேட்பேன். இதையடுத்து அந்த பெண்களும் சரி என்று சொன்னவுடன் நான் அவர்களை ஆட்டோவில் ஏற்றி குப்பன் கொட்டாய் பகுதியில் உள்ள எனக்கு சொந்தமான பண்ணை வீட்டிற்கு அழைத்து செல்வேன்.
பெண்களை வெளியே நிறுத்தி விட்டு முதலில் படுக்கை அறைக்கு செல்லும் நான் செல்போன் காமிராவை உயரமான இடத்தில் வைத்து ஆன் செய்து விட்டு வந்து விடுவேன். பின்னர் அந்த பெண்கள் உள்ளே வந்து உல்லாசத்துக்காக ஆடைகளை கழற்றி தயாராவார்கள். பின்னர் நான் அவர்களுடன் உல்லாசமாக இருப்பேன். பின்னர் அவர்களை மீண்டும் கொண்டு போய் விட்டு விடுவேன்.

இவ்வாறு என்னுடன் உல்லாசம் அனுபவிக்கும் பெண்களுக்கு நான் வட்டி வாங்க மாட்டேன். இதை கேள்விப்பட்டு பலர் என்னிடம் வந்தனர். நானும் எனக்கு தேவையான சந்தோசத்தை அவர்களிடம் அனுபவித்தேன். மேலும் தனியாக இருக்கும் போது நான் பெண்களுடன் உல்லாசமாக இருக்கும் வீடியோ காட்சிகளையும் போட்டு பார்த்து ரசிப்பேன்.வீடியோ பார்த்து கொண்டு இருந்த போது திடீரென ஹேங் ஆனதால் சர்வீஸ் சென்டருக்கு கொண்டு சென்றேன். அப்போது தான் இந்த வீடியோ காட்சிகளை திருடி வெளியில் உலா விட்டு உள்ளனர். நான் யாரையும் மிரட்டி உல்லாசம் அனுபவிக்கவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.சிவராஜியிடம் செல்லும் பெண்கள் அவருடன் ஜாலியாக இருந்து உள்ளனர். ஆனால் அவர் செல்போன் காமிராவில் வீடியோ எடுப்பார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. தற்போது ஆபாச வீடியோ வெளியாகி விட்டதால் சிவராஜியிடம் வந்து சென்ற பல பெண்கள் கதிகலங்கி உள்ளனர். இந்த ஆபாச கேசட்டுகள் மாவட்டம் முழுவதும் பரவிவருகிறது. தங்களது கணவர் மற்றும் குடும்பத்தினர் பார்த்து விட்டால் என்ன நடக்குமோ? என்ற பயத்தில் பெண்கள் உள்ளனர்.இந்த வீடியோவில் உள்ள பெண்கள் யாருமே இதுவரை புகார் கொடுக்க முன்வரவில்லை.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

1 year ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

1 year ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

1 year ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

2 years ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

2 years ago