கட்டுப்பாட்டு அறைக்கு வந்த போன் கால்… தனி ஒருவனாகச் சென்ற காவலருக்கு 18 வெட்டு

சென்னை ராயப்பேட்டையில் தகராறு நடக்கும் இடத்துக்கு தனி ஒருவனாகச் சென்ற காவலர் ராஜவேலுவை ரவுடிக் கும்பல் சரமாரியாக வெட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை போலீஸ் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று போன் கால் வந்தது. அதில் பேசியவர், `ராயப்பேட்டை பி.எம். தர்கா குடிசை மாற்று வாரிய குடியிருப்பு அருகில் உள்ள பகுதியில் சில ரவுடிகள் மது அருந்திக்கொண்டு அவ்வழியாகச் செல்பவர்களிடம் தகராறு செய்துகொண்டிருக்கின்றனர்’ என்று கூறினார். தொடர்ந்து கட்டுப்பாட்டு அறையிலிருந்து ராயப்பேட்டை போலீஸ் நிலையத்துக்கு இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அப்போது, ரோந்துப் பணியில் ஈடுபட்ட முதல்நிலை காவலர் ராஜவேலுக்கு இந்தத் தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்குச் சென்றார். அப்போது, அங்கு சிலர் மது அருந்திக்கொண்டிருந்தனர். அவர்களை அங்கிருந்து செல்லும்படி ராஜவேலு கூறியுள்ளார். அப்போது, தனியாக சிக்கிக்கொண்ட காவலர் ராஜவேலுவை மது அருந்தியவர்கள் தாக்கினர். அவர்களுடன் ராஜவேலு, தனியொருவனாகப் போராடினார். ஆத்திரமடைந்த அந்தக்கும்பல் அரிவாள், கத்தியால் ராஜவேலுவை சரமாரியாகத் தாக்கினர். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்தார். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் ராயப்பேட்டை ரோந்து போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்றனர். போலீஸாரைப் பார்த்ததும் அந்தக்கும்பல் ஆட்டோவில் தப்பியது.

உயிருக்குப் போராடிய ராஜவேலுவை மீட்ட போலீஸார், ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ராஜவேலுவின் தலையில் மட்டும் 16 இடங்களில் வெட்டுக்காயங்கள் உள்ளன. மேலும் அவரின் இடது காது, கன்னத்தில் தலா ஒரு வெட்டுக்காயம் உள்ளது. ராஜவேலுவைத் தாக்கியவர்கள் யார் என்று போலீஸார் விசாரித்தனர். அவர்கள், ராயப்பேட்டை காவல் நிலைய ரவுடிகள் சரித்திர பதிவேட்டில் உள்ள அரவிந்தன் மற்றும் அவரின் கூட்டாளிகள் என்று தெரியவந்தது. தொடர்ந்து, ராஜவேலுவைத் தாக்கிய அரவிந்தன், ஜிந்தா, வேல்முருகன் உள்பட 6 பேரை போலீஸார் கைதுசெய்தனர். அவர்களிடம் விசாரணை நடத்திவருகின்றனர்.

கம்பீரம்’ படத்தில் நடிகர் வடிவேலு, கலவரத்தைக் கட்டுப்படுத்த வித்தியாசமான கெட்டஅப்பில் சென்று ஒரு கும்பலிடம் சிக்கிக் கொள்வார். அதுபோலத்தான் ராஜவேலு, தனியாகச் சென்று ரவுடி கும்பலிடம் சிக்கியுள்ளார். சமீபகாலமாக போலீஸாரைத் தாக்கும் சம்பவம் தொடர்கதையாகிவருகிறது. இதனால், பாதுகாப்பு இல்லாமல் பணியாற்றும் நிலையில், சென்னை மாநகரக் காவலர்கள் தள்ளப்பட்டுள்ளனர். எனவே, சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவலர்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

தமிழ்செல்வன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

1 year ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

1 year ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

1 year ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

1 year ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

2 years ago