ஆலமரம் (2014) திரை விமர்சனம்….

மதுரை மாவட்டத்தில் இருக்கும் ஒரு கிராமத்தின் எல்லையில் தனித்து நிற்கும் ஆலமரத்தில் தங்கள் ஊரை கட்டுக்குள் வைத்திருந்த கருத்தப்பாண்டி என்பவனின் ஆவி இருப்பதாக அந்த ஊரே நம்புகிறது. இதனால், அந்த ஆலமரத்துக்கு அருகில் செல்ல எல்லோரும் பயப்படுகிறார்கள்.இந்நிலையில், வெளியூரில் இருந்து திருமணத் தடை நீங்க 10 நாள் பூஜை செய்ய அக்கிராமத்திற்கு வருகிறாள் நாயகி அவந்திகா. அதே ஊரில் கூத்துக்கலைஞராக உள்ள ஹேமந்த், நாயகியைப் பார்த்ததும் காதலில் விழுகிறார். நாளடைவில் இருவரும் காதலிக்க ஆரம்பிக்கிறார்கள்.இவர்களுடைய காதலுக்கு யாரும் அருகில் வராத ஆலமரத்தை காவலாக வைத்துக் கொள்கிறார்கள். ஆலமரத்தின் அடியிலேயே இவர்கள் சந்தித்து தங்கள் காதலை வளர்த்துக் கொள்கிறார்கள்.

இதற்கிடையில், நாயகியின் வளர்ப்பு தந்தை அவளை திருமணம் செய்துகொள்ள நினைக்கிறார். இதற்கு நாயகி எதிர்ப்பு தெரிவிக்கிறாள். ஒரு கட்டத்தில் தனது தவறை உணர்ந்த, வளர்ப்பு தந்தை நாயகிக்கு பிடித்தவனையே திருமணம் செய்துவைக்க சம்மதம் தெரிவிக்கிறார். அதன்படி, நாயகன்-நாயகி திருமண ஏற்பாடுகள் நடக்கிறது. இந்நிலையில், அதே ஊரில் பெரிய ரவுடிகளாக இருக்கும் இருவரிடமும் நாயகியை காதலிக்க வைப்பதாக கூறி, அவர்களிடம் நிறைய பணத்தை கறக்கிறான் நாயகனின் நண்பன் சடையன்.ஆனால், நாயகனுக்கும், நாயகிக்கும் திருமணம் நடைபெறவிருக்கிறது என்ற செய்தி அறிந்ததும், இரண்டு ரவுடிகளும் சடையனை கொலை செய்ய ஆட்களை ஏவி விடுகின்றனர். இறுதியில், நாயகனுக்கும்-நாயகிக்கும் கல்யாணம் நடந்ததா? சடையனை அந்த ரவுடிகள் கொன்றார்களா? என்பதே மீதிக்கதை.

நாயகன் ஹேமந்த் படம் முழுக்க முகத்தில் பவுடர் பூசிக்கொண்டு ஃபுல் மேக்கப்புடன் வலம் வருகிறார். ஆனால், முகத்தில் நடிப்பை வரவழைக்கத்தான் ரொம்பவும் தடுமாறியிருக்கிறார். காதல் காட்சிகளிலாவது ஓரளவு நடிப்பார் என எதிர்பார்த்தால், அதிலும் மிகையான நடிப்பையே வெளிப்படுத்தியிருக்கிறார். ஆனால், பாடல் காட்சிகளில் அழகாக நடனமாடியிருக்கிறார்.நாயகி அவந்திகா மேனன் கதாநாயகிக்குண்டான அழகுடன் வலம் வந்தாலும், அவரை நாயகியாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நடிப்பிலும் இன்னும் கொஞ்சம் தேறவேண்டும்.நாயகனின் நண்பனாக வரும் சடையன், நாயகனைவிட அதிக காட்சிகளில் இடம்பெற்றிருக்கிறார். ஒரே தோரணையில் வசனத்தை பேசி போரடிக்கிறார். சடை முடியோடு இவர் வரும் காட்சிகள் கலகலப்பாக இருந்தாலும் ரசிக்க முடியவில்லை.

ஆலமரம் ஒரு பேய் படம் என்று நம்பி சென்றவர்களுக்கு ஏமாற்றத்தையே கொடுத்திருக்கிறார் இயக்குனர் எஸ்.என்.துரைசிங். ஆலமரத்தில் பேய் இருக்கிறது என்று பெயருக்கு சொல்லி, அதற்குண்டான பயத்தை ரசிகர்களுக்கு கொடுக்க தவறியிருக்கிறார் இயக்குனர். காதல் காட்சிகளையும் வலுவாக சொல்லாமல் சொதப்பியிருக்கிறார். ஒளிப்பதிவாளர் உதய்சங்கர் கேமரா கோணங்களை வித்தியாசமாக வைத்து காட்சிகளை வேறுபடுத்தி காட்ட முயற்சி செய்திருக்கிறார். ஒரு சில காட்சிகளில் இவரது கேமரா பளிச்சிடுகிறது. ராம்ஜீவன் இசையில் பாடல்கள் பரவாயில்லை. பின்னணி இசை சுமார் ரகம்தான்.

மொத்தத்தில் ‘ஆலமரம்’ கற்பனை…………

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

1 year ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

1 year ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

1 year ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

1 year ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

2 years ago