கடந்த வருடம் வெளியான படங்களின் எண்ணிக்கையில் 10 சதவீத படங்களே வெற்றி பெற்று முதலீடு செய்த தொகையை மீட்டு இருக்கிறது. 90 சதவீத படங்கள் தோல்வி அடைந்துள்ளன. இந்த ஆபத்தான நிலையை அலசி ஆராய்ந்து பார்த்ததில் மக்களின் நேரமின்மையும், மக்களுக்கான வேலைப்பளுவில் கிடைக்கும் நேரத்தில் திரைப்படம் பார்க்கும் பழக்கமும், அதற்கான வசதியும் வந்து விட்டதும்தான் காரணம்.இதை பயன்படுத்தி சில சமூக விரோத சக்திகள் அவர்களது சந்தர்ப்பங்களை பயன்படுத்தி சம்பாதிக்கும் சூத்திரம் தெரிந்தவர்கள், அனுமதியின்றி திரைப்படங்களை பல இடங்களில் திருட்டு வியாபாரம் செய்து பிழைப்பு நடத்தவும், அதற்கு மக்களை அடிமைகளாக்கி திருட்டுத்தனமாக பார்ப்பது சரி எனவும் சொல்ல வைத்து விட்டார்கள்.
திருட்டுத்தனத்தை களைந்து முதலீடு செய்த பணத்தை திரும்ப எடுப்பதே எங்களின் நோக்கம். இஅதை கருத்தில் கொண்டு ஆரம்பிக்கப்பட்டதே சினிமா டு ஹோம். இதன் மூலம் தயாரிப்பாளர்களின் முதலீட்டை மதிக்காமல் திருட்டுத்தனமாக களவு செய்யும் கும்பலிடம் இருந்து சினிமாவை மீட்க முடியும்.நடப்பு ஆண்டில் 298 படங்கள் தணிக்கை செய்யப்பட்டு, 159 படங்கள்தான் திரைக்கு வந்துள்ளன. மீதி படங்களுக்கு தியேட்டர்கள் கிடைக்காமல் முடங்கியுள்ளன. சினிமா டு ஹோம் மூலம் முடங்கி கிடக்கும் படங்களுக்கு விடிவு காலம் ஏற்படும்.
புது டி.வி.டிகளை வீடுகளுக்கு சப்ளை செய்யும்போது, தியேட்டர்களிலும் திரையிடப்படும். பெரிய படங்கள் தியேட்டர்களில் திரையிடப்பட்டு ஒரு வாரம் கழித்து டி.வி.டி.யாக வெளியிடப்படும். இதற்காக 7 ஆயிரம் முகவர்கள் நியமிக்கப்படுகிறார்கள். ஒவ்வொரு முகவரின் கீழ் 4 ஆயிரம் குடும்பங்கள் இருக்கும்.முதல்கட்டமாக, ஜே.கே. எனும் நண்பனின் வாழ்க்கை, ஆள், சிவப்பு எனக்கு பிடிக்கும், மேகா, அப்பாவின் மீசை, வேல்முருகன் போர்வெல்ஸ் ஆகிய படங்கள், சினிமா டு ஹோம் மூலம் வீடுகளுக்கு கொண்டு செல்லப்படும். இவ்வாறு டைரக்டர் சேரன் கூறினார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே