ஐ.பி.எல். ஊழலை மறைக்கவே சுனந்தா கொலை செய்யப்பட்டதாக சுப்ரமணிய சாமி பேச்சு!…

புதுடெல்லி:-முன்னாள் மத்திய மந்திரி சசிதரூர் மனைவி சுனந்தா கடந்த ஜனவரி மாதம் 17ம் தேதி டெல்லி லீலா ஓட்டலில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். சசிதரூர் அன்றைய தினம் டெல்லியில் நடந்த அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் கலந்து கொண்டு ஓட்டலுக்கு திரும்பிய போது அவர் பிணமாக கிடந்தது தெரிய வந்தது.உடல்நலக் குறைவு காரணமாக சுனந்தா சிகிச்சை பெற்று வந்ததாகவும், அதிக டோஸ் கொண்ட மாத்திரைகளை சாப்பிட்டதால் அவர் இறந்திருக்கலாம் என்று கூறப்பட்டது. ஆனால் ஓட்டலில் வைத்து சுனந்தாவுக்கும், சசிதரூக்கும் தகராறு ஏற்பட்டதாகவும், பின்னர் சசிதரூர் காங்கிரஸ் கூட்டத்துக்கு சென்று விட்டதாகவும் சர்ச்சை எழுந்தது.

இந்நிலையில் எய்ம்ஸ் மருத்துவமனையில் சுனந்தாவின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டதில் அவர் இயற்கை மரணம் அடைந்ததாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதனால் அவரது மரணம் தொடர்பான சர்ச்சை அப்போது முடிவுக்கு வந்தது.
மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில், சுனந்தா மரணம் தொடர்பாக ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை டாக்டர் சுதிர் குப்தா பரபரப்பு குற்றச்சாட்டு கூறியிருந்தார். சுனந்தா இயற்கையாக இறந்ததாக பிரேத பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடுமாறு உயர் அதிகாரிகள் தன்னை கட்டாயப்படுத்தியும், நிர்ப்பந்தப்படுத்தியும் அறிக்கை பெற்றதாக குப்தா குற்றஞ்சாட்டினார்.

இந்நிலையில் இவ்விஷயத்தில் சுப்ரமணிய சாமியும் தற்போது புது குண்டு போட்டுள்ளார். சுனந்தாவுக்கு ஐ.பி.எல். போட்டிகளில் நடந்த முறைகேடுகள் தொடர்பான முழு விவரங்கள் தெரியுமென்றும், ராபர்ட் வதேராவுக்கு இதில் உள்ள தொடர்பும் அவருக்கு தெரிந்திருந்ததாகவும் சாமி குற்றஞ்சாட்டியுள்ளார். இந்த விஷயங்கள் வெளியே தெரியாமல் இருப்பதற்காகவே சுனந்தா கொல்லப்பட்டதாகவும், அது சசி தரூருக்கும் தெரியும் எனவும் சாமி கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. இது குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் சாமி கேட்டுக்கொண்டுள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

1 year ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

1 year ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

1 year ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

1 year ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

2 years ago