சிறுவனை நரபலி கொடுத்த சாமியாரால் பரபரப்பு…!

லக்னோ :- உத்தரபிரதேச மாநிலம் பதோசி மாவட்டத்தில் திலனுகா கிராமத்தை சேர்ந்த 12 வயது சிறுவன் சுமித். வீட்டை விட்டு சென்ற சிறுவன் திரும்பாததால் அவன் காணாமல் போனது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. இதற்கிடையே அந்த கிராமத்துக்கு வெளியே சிறுவனின் உடல் பாகங்கள் துண்டு துண்டாக வெட்டப்பட்டு கிடந்தது. இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

போலீஸ் விசாரனையில் அதே பகுதியை சேர்ந்த சாமியார் 3 பேர் சிறுவனை நரபலி கொடுத்து துண்டு துண்டாக வெட்டியது தெரிய வந்தது.
கடவுளுக்கு காணிக்கை செலுத்துவதற்காக அவர்கள் நரபலி கொடுத்து உள்ளனர். இது தொடர்பாக சாமியார் உபேந்திரா திவாரி மற்றும் அவரது உதவியாளர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

இது குறித்து போலீஸ் சூப்பிரெண்டு சுபாஷ் சந்திர துபே நிருபர்களிடம் கூறியதாவது:–

சிறுவனை முதலில் கழுத்தை நெறித்து கொன்று உள்ளனர். கண்களை தோண்டி வெளியே எடுத்தனர். பின்னர் தலை மற்றும் உடல் உறுப்புகளை துண்டு துண்டாக வெட்டி உள்ளனர். கோவில் அருகே யாகம் செய்து அவர்கள் சிறுவனை நரபலி கொடுத்து இருக்கிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

1 year ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

1 year ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

1 year ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

1 year ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

2 years ago