ஒரு சில நாட்களில் தன் தவறை உணரும் சினேகா தனது தோழியின் ஆலோசனைப்படி பிரகாஷ்ராஜிடம் தன் தவறுக்கு வருத்தம் தெரிவிக்க, சில நாட்கள் போன் மூலம் ஏற்பட்ட பழக்கத்தில் அரும்பு விடுகிறது காதல். சினேகாவும்,பிராகஷ்ராஜும் போனிலேயே தங்களின் காதலை வளர்க்கிறார்கள்.இவர்கள் நேரில் சந்திக்க முடிவு செய்யும்போது அங்கே வில்லனாக வருகிறார்கள் இருவர். அவர்கள் யார்? காதல் கை கூடியதா, இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை.
‘சால்ட் அன்ட் பெப்பர்’ என்ற தலைப்பில் மலையாளத்தில் வெளிவந்து வெற்றி பெற்ற படம் தான் தமிழில் ‘உன் சமையலறையில்’ ஆகியிருக்கிறது.வழக்கமான அக்மார்க் பிரகாஷ்ராஜ் படம். சக சினிமாக்காரர்களை நய்யாண்டி செய்வதை இன்னமும் குறத்துக்கொள்ளவில்லை. இதற்கு, ‘ஒரு பெண் இன்ஸ்பெக்டருக்கும், கைதிக்கும் இடையில் நடக்கும் காதல்’ காட்சிக்கு சினேகா டப்பிங் பேசும் இடத்தை உதாரணமாக சொல்லலாம். அந்தப் படத்தின் பெயர் ‘கம்பிக்குள் காதல்’மெதுவாக நகரும் திரைக்கதை கடைசி 30 நிமிடங்களில் மட்டுமே கவனிக்க வைக்கிறது. விரக்தி, சோகம், கோபம், இயலாமை என்று ஒரு வட்டத்திற்குள் சிக்கிய சினேகாவை பார்த்து பரிதாபம் ஏற்படுகிறது. திருமண வயதைத் தாண்டிய பெண்கள் எதிர்கொள்ளும் காட்சியமைப்புகள் கச்சிதம். அதிலும் ஊர்வசியிடம், ‘எனக்கு கல்யாணம் ஆகவில்லை, என்னை கல்யாணம் பண்ணிக்கிறீங்களா?ன்னு போற வர்ற எல்லார்கிட்டேயும் கேட்கவா முடியும்னு’ சொல்லி அழும் இடம் திருமணம் ஆகாத பெண்களின் வேதனையை வெளிப்படுத்துகிறது. அதேபோல் பிராகாஷ்ராஜுக்கு அமைக்கபட்ட காட்சியமைப்புகளும் கச்சிதம்.
படத்தில் பெரிய அளவில் சுவாரஸ்யம் இல்லாமலும், கதையில் திருப்பங்கள் இல்லாமலும் செல்வதால் ஒரு சோர்வு ஏற்படுகிறது. ஊர்வசி, தம்பி ராமய்யா, குமரவேல் என நடிகர்கள் இருந்தும் காமெடிக் காட்சிகள் இல்லாதது ஏமாற்றமே!. தேஜஸ், சம்யுக்தா இருவருடைய காதல் காட்சிகளும் அழுத்தமில்லாமல் இருக்கிறது.
இளையராஜாவின் இசையில் பாடல்களை கேட்கத் தோன்றுகிறது. மிதமான பிண்ணனி இசை. ப்ரீத்தாவின் ஒளிப்பதிவு பரவாயில்லை ரகம்.
மொத்தத்தில் ‘உன் சமையலறையில்’ அன்பு……
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே