இரண்டு இரவுகளை திகாரில் கழித்த கெஜ்ரிவாலை நேற்று அவரது மனைவி சுனிதா சிறைக்கு சென்று சந்தித்தார். இன்று அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுகிறார் என்பதை அறிந்திருந்த அவரது ஆதரவாளர்கள் கெஜ்ரிவால் ஜாமினில் விடுவிக்கப்படுவாரா? என்ற ஆவலில் காலையில் இருந்தே கோர்ட் வாசலில் குழுமியிருந்தனர். திகார் சிறையில் இருந்து அழைத்து வரப்பட்ட அரவிந்த் கெஜ்ரிவால் இன்று பிற்பகல் நீதிபதியின் முன்னர் ஆஜர்படுத்தப்பட்டார். அவரது சிறைக்காவலை ஜூன் மாதம் 6-ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.
கெஜ்ரிவால் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டது தொடர்பாக அதிருப்தி தெரிவித்த ஆம் ஆத்மி மூத்த தலைவர்கள் சிலர், ‘ஒருவர் தப்பியோடி விடுவார் என்னும் நிலையில்தான் ஜாமின் பத்திரங்களை பிணையாக கேட்க வேண்டும். அரவிந்த் கெஜ்ரிவால் ஓடிப் போகும் நபர் என்று கோர்ட் கருதுகிறதா?’ என்று கேள்வி எழுப்பியுள்ளனர். இன்று அவர் ஜாமினில் விடுவிக்கப்படாததால், கட்சி தொண்டர்களுடன் கூடிப் பேசி அடுத்தகட்ட நடவடிக்கை பற்றி முடிவு செய்யப்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே