அந்த வகையில், ஆட்சி மாற்றம், நோயிலிருந்து விடுதலை, ஏழ்மை மீட்சி போன்ற வியத்தகு செயல்களில் ஈடுபட்டு 2 அற்புதங்களை புரிந்த முன்னாள் போப்புகளில் சிலருக்கு புனிதர் பட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில், 1958ம் ஆண்டில் இருந்து 1963 வரை போப்பாக இருந்த போப் 23வது ஜான் மற்றும் 1978ம் ஆண்டில் இருந்து 2005 வரை போப் பதவியை 27 ஆண்டுகள் வகித்த போப் இரண்டாம் ஜான்பால் ஆகியோருக்கு ஒரே நேரத்தில் புனிதர் பட்டம் வழங்கும் விழா வாடிகன் நகரில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் நேற்று நடைபெற்றது.இதில் உலகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான கிறிஸ்துவர்கள் கலந்து கொண்டு சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். இதனால் வாடிகன் நகரமே விழா கோலம் பூண்டிருந்தது. நேற்று காலை நடைபெற்ற புனிதர் பட்டம் வழங்கும் நிகழ்ச்சியில் போப்பாண்டவர் பிரான்சிஸ் பங்கேற்றார்.
மறைந்த போப் ஆண்டவர்கள் 2ம் ஜான்பால், 23ம் ஜான் ஆகியோருக்கு போப் ஆண்டவர் பிரான்சிஸ், புனிதர் பட்டம் வழங்கினார். இதையொட்டி, வாடிகன் தேவாலயத்தில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.நிகழ்ச்சியில், முன்னாள் போப் ஆண்டவர் 16ம் பெனடிக் கலந்து கொண்டார். 100 வெளிநாட்டு பிரதிநிதிகள், இத்தாலி அரசு பிரதிநிதிகள் ஆகியோரும் கலந்து கொண்டனர். புனிதர் பட்டம் பெற்றவரின் பெயரால் உலகில் எந்த ஓர் இடத்திலும் ஆலயம் எழுப்பி அவருக்கு வணக்கம் செலுத்த கத்தோலிக்க திருச்சபை அனுமதி அளித்துள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே