யார் கண் பட்டதோ தெரியவில்லை. கடந்த இரண்டு வருடங்களாக திலீபுக்கும், மஞ்சுவுக்கும் இடையே கருத்து வேறுபாடு. இருவரும் இதுபற்றி வெளிப்படையாக பேசாவிட்டாலும் இருவரும் பிரிந்து வாழ்கிறார்கள் என்பது ஊரறிந்த ரகசியம். தன் பெயருக்கு பின்னால் இருந்த திலீப்பின் பெயரை நீக்கி விட்டார் மஞ்சு. மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கிவிட்டார். தனியாக வெளிநாடுகளுக்கு சென்று நடன நிகழ்ச்சிகள் நடத்துகிறார். இதை வைத்து பார்க்கும்போது விரைவில் முறைப்படி விவாகரத்து வழக்கு வரும் என்று தெரிகிறது.இந்நிலையில் திலீப்-மஞ்சுவாரியார் பிரிவுக்கு காவ்யா மாதவன்தான் காரணம் என்கிற செய்தி இப்போது பரவி இருக்கிறது. முன்பு திலீப்பும், காவ்யா மாதவனும் தொடர்ந்து ஜோடியாக நடித்தார்கள். அவர்கள் நடித்த அத்தனை படமும் ஹிட்டானது. திலீப்புக்கும் காவ்யாவுக்கும் நெருக்கம் என்று மீடியாக்கள் கிசுகிசுக்க ஆரம்பித்தது. இது மஞ்சுவுக்கு பிடிக்கவில்லை.
இனி காவ்யாவுடன் நடிக்க கூடாது என்று கூறியிருக்கிறார். இதுதான் கருத்து வேறுபாட்டுக்கு முக்கிய காரணம். இந்த நிலையில் காவ்யா திருமணமாகிச் சென்று விட்டதால் மஞ்சு இந்த பிரச்னையை அத்துடன் விட்டுவிட்டார்.ஆனால் திருமணமாகிச் சென்ற காவ்யா கணவனை பிரிந்து விவாகரத்து பெற்று மீண்டும் நடிக்க ஆரம்பித்து விட்டார் அதுவும் திலீப்புடனேயே. இதனால் திலீப்-காவ்யா உறவை உறுதி செய்து கொண்ட மஞ்சு வாரியார், திலீப்பிடம் இதுபற்றி பேச அதுவே முற்றி பிரிவாகிவிட்டது. தற்போது மஞ்சு, திருச்சூரில் உள்ள தனது தாய் வீட்டில் இருக்கிறார். விரைவில் மஞ்சுவை விவாகரத்து செய்து விட்டு காவ்யாவை திருமணம் செய்து கொள்ள திலீப் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த செய்தியை இருவருமே இதுவரை மறுக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே