25 வயது பெண்ணின் அம்மாவை மனந்த வாலிபர்…

சண்டிகார்:-அமெரிக்காவில் கலிபோர்னியாவில் வசித்தவர் அட்ரியானா பெரால். வயது 41. அமெரிக்கன் ஸ்டைலில் ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்த அட்ரியானா பேஸ்புக்கில் அரியானாவை சேர்ந்த முகேஷ் குமார் என்ற 25 வயது வாலிபரை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு பின்னர் காதலாக மாறியுள்ளது.

இருவரும் காதலிக்கவே, அம்மா வயதுடை 41 வயது கொண்ட அட்ரியானாவை திருமணம் செய்து கொள்ள முகேஷ் சம்மதித்துள்ளார். காதிலில் விழுந்த சில மாதங்களிலே அட்ரியானா, முகேஷ் குமாரை திருமணம் செய்து கொண்டார். வீட்டு வேலைகள் அனைத்தும் செய்து விவசாய வேலைகளையும் செய்து இந்திய பெண்ணை போன்று ஒரு மனைவியாக வாழ அட்ரியானா உறுதி அளித்து திருமணம் செய்துள்ளார்.
அமெரிக்காவின் கிளப்பில் நண்பர்களுடன் மகிழ்ச்சியாக இருந்த அட்ரியானா, அரியானாவில் வீட்டு வேலைகளை செய்து குடும்ப வாழ்க்கையை நடத்தி வருகிறார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இந்து முறைப்படி திருமணம் நடந்துள்ளது.

பேஸ்புக்கில் கருத்துகளை பகிர்ந்து கொண்ட இருவரும் மிகவும் நெருக்கமாகியுள்ளனர். இதனை அடுத்து முகேஷ் அட்ரியானாவில் தொலை பேசியில் பேசியுள்ளார். இது தொடர்பாக அட்ரியானா கூறுகையில், முகேஷ் தனது காதலை போனில் வெளிப்படுத்தியபோது என்னால் ஒன்றும் கூறமுடிவில்லை. எனக்கு சிர்ப்புதான் வந்தது என்று கூறியுள்ளார்.அதனை அடுத்து நாங்கள் சிலவற்றை பேசினோம். நான் முகேஷை தீவிரமாக உணர்ந்தேன். நீ என்னுடைய இதயத்தை வென்றால் திருமணம் குறித்து பரிசீலனை செய்கிறேன். நாங்கள் இரண்டு மூன்று வாரங்களாக பேசினோம். நான் முகேஷுடன் இந்தியாவிற்கு வர வேண்டும் என்று விரும்பிய போது இந்த சம்பவம் நடைபெற்றது என்று கூறியுள்ளார்.அட்ரியா இது தொடர்பாக மேலும் கூறுகையில், எனது 25 வயது மகள் என்னுடைய நடவடிக்கையை தொடர்ந்து கவனித்து வந்தார். என்னுடைய நிறைய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் இந்தியாவில் என்னுடைய பாதுகாப்பு குறித்து மிகவும் பயப்பட்டனர்.

இந்நிலையில் மெக்சிகோவில் இருந்து குமாருடைய குடும்பத்தினர் அமெரிக்கா வந்தனர். அப்போது நான் முகேஷுடன் இந்தியாவிற்கு வருவதாக கூறினேன். அப்போது அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.எனது மகள் இந்தியாவில் எனது பாதுகாப்பு குறித்து மிகவும் அழுதார். மேலும், இந்தியா பெண்களுக்கு பாதுக்காப்பற்ற இடம் என்று கூறினார். அதற்கு பதில் அளித்த நான் எல்லாம் சரியாகிவிடும் என்று உத்தரவாதம் கொடுத்தேன் என கூறியுள்ளார்.பின்னர் இந்தியா வந்து தனது உடையில் இருந்து அனைத்தையும் மாற்றிக் கொண்டு முகேஷை திருமணம் செய்து வாழக்கை நடத்தி வருகிறார். வீட்டு வேலைகள், சமையல், துணி துவைத்தல் மற்றும் விவசாய வேலை என அனைத்தையும் அட்ரியா செய்து வருகிறார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

1 year ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

1 year ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

1 year ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

1 year ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

2 years ago