ஆசிரியரை அரிவாளால் வெட்டிய மாணவர்கள்…

சுவாமியார்மடம்:-கருங்கல்லை அடுத்த பாலப்பள்ளத்தைச் சேர்ந்தவர் பென்சிகர் (வயது 30). இவர் மார்த்தாண்டம் பகுதியில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். தினமும் காலையில் வீட்டில் இருந்து கல்லூரிக்கு மோட்டார் சைக்கிளில் செல்வார். இன்று காலையிலும் இது போல கல்லூரிக்கு புறப்பட்டார்.

திருவட்டார், புலிப்பனம் அருகே வந்தபோது, பென்சிகர் வேலை பார்க்கும் கல்லூரியில் என்ஜினீயரிங் 3–ம் ஆண்டு படிக்கும் மாணவர் சஜீத் என்பவர் பென்சிகர் வந்த மோட்டார் சைக்கிளை வழி மறித்தார்.பென்சிகர் அவரிடம் எதற்காக மோட்டார் சைக்கிளை நிறுத்தினாய்? என்று கேட்பதற்குள் சஜித்தின் நண்பர்கள் மேலும் 2 பேர் அங்கு வந்தனர். அவர்கள் கைகளில் அரிவாள் மற்றும் உருட்டுக்கட்டைகள் இருந்தன. கண்ணிமைக்கும் நேரத்தில் 3 பேரும் சேர்ந்து பென்சிகரை சரமாரியாக தாக்கினர். அரிவாளாலும் வெட்டினர்.பென்சிகர் ஹெல்மெட் அணிந்திருந்ததால் அவரது தலையில் வெட்டு விழவில்லை. மற்ற இடங்களில் வெட்டுப்பட்டு அவர் அலறினார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்தனர்.

அவர்களை கண்டதும் மாணவர்கள் 3 பேரும் அங்கிருந்து தப்பியோடி தலைமறைவாகி விட்டனர். படுகாயம் அடைந்த பென்சிகர் குலசேகரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். மேலும் அவர் இந்த சம்பவம் பற்றி திருவட்டார் போலீசில் புகார் செய்தார்.அதில், என்ஜினீயரிங் மாணவர் சஜீத், அவரது நண்பர்கள் சரவணன், வினோ ஆகியோர் சேர்ந்து தங்கள் ஊரைச் சேர்ந்த பெண்களிடம் பேசியது ஏன்? என கேட்டு தாக்கிய தாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் கூறி இருந்தார்.
அதன் பேரில் திருவட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில், காதல் பிரச்சினை காரணமாக பேராசிரியரை மாணவர்கள் தாக்கி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. மாணவர்கள் பிடிபட்ட பின்பே தாக்குதலுக்கான உண்மை காரணம் தெரிய வரும். அவர்களை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

1 year ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

1 year ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

1 year ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

1 year ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

2 years ago