சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் “ஆதார்” அட்டை புகைப்படம் எடுக்கும் பணி நீட்டிக்கப்படுகிறது. தமிழக அரசின் நலத்திட்ட உதவிகளை பெறுவதற்கு ஆதார் அட்டை அவசியமாகிறது. ஆதார் அட்டை எண் முக்கியமாக கருதப்படுவதால் தமிழகம் முழுவதும் பொது மக்கள் புகைப்படம் எடுத்து வருகிறார்கள்.

தமிழ்நாட்டில் இதுவரை 4 கோடியே 77 லட்சம் பேர் ஆதார் அட்டைக்கான புகைப்படம் எடுத்துள்ளனர். இது 70 சதவீதமும், 3 கோடியே 86 லட்சம் பேருக்கு ஆதார் அட்டை எண் வழங்கப்பட்டுள்ளது. இது 80.99 சதவீதமாகும்.

மற்ற மாவட்டங்களை விட சென்னை மாவட்டத்தில்தான் புகைப்படம் எடுப்பவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. இதுவரை 22 லட்சத்து 60 ஆயிரம் பேர் புகைப்படம் எடுத்துள்ளனர். இது 54 சதவீதமாகும்.

ஆதார் அட்டை எண் 15 லட்சத்து 51 ஆயிரம் பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. இது 83 சதவீதம்.

நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விட குறைந்த அளவில் புகைப்படம் எடுத்துள்ள 10 மாவட்டங்களில் இன்றுடன் (31ம் தேதி) முதல் கட்டப் புகைப்படம் எடுக்கும் பணிகள் முடிவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் தற்போது மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி அல்லது மார்ச் வரை கூட புகைப்படம் எடுக்கும் பணி தொடரும் என்று அதிகாரி கூறினார்.

இது குறித்து மக்கள் தொகை கணக்கெடுப்பு துறை இணை இயக்குனர் கிருஷ்ணாராவ் கூறியது!!!_

சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் புகைப்படம் எடுக்கும் பணி நீட்டிக்கப்படுகிறது. பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்படும் வரை இந்த பணி மேற்கொள்ளப்படும்.

ஈரோடு, கோவை, நீலகிரி, கிருஷ்ணகிரி, கன்னியாகுமரி, விருதுநகர், ராமநாதபுரம், திருப்பூர் ஆகிய 8 மாவட்டங்களில் 2_வது கட்டப் பணி தொடங்க உள்ளது. ஏற்கனவே 14 மாவட்டங்களில் 2_வது கட்டப்பணி நடைபெற்று வருகிறது. சென்னை மாநகராட்சி பகுதியில் புகைப்படம் எடுக்க ஆர்வம் காட்டாமல் இருக்கிறார்கள். பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

1 year ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

1 year ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

1 year ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

1 year ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

2 years ago