Prabhu_Solomon

செய்திகள், திரையுலகம்

முதல் படம் வெளிவரும் முன்பே ஹாட்ரிக் அடிக்கும் நடிகை!…

சென்னை:-பிரபு சாலமன் இயக்கும் கயல் படத்தின் நாயகியாக நடித்து வருகிறார் ஆனந்தி. சில தெலுங்கு படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்தவருக்கு பிரபுசாலமன் படத்தில் ஜாக்பாட் அடித்திருக்கிறது. அந்தப் படத்தின் படப்பிடிப்புகூட முழுமையாக முடிந்திராத நிலையில் அடுத்து இரண்டு படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இயக்குனர் வெற்றிமாறன் தயாரிப்பில் தானுகுமார் இயக்கும் பொறியாளன் படத்தில் ஹரிஸ் கல்யாண் ஜோடியாக நடிக்கிறார். அடுத்து தற்போது இயக்குனர் பாலா தயாரிக்கும் பெயரிடப்படாத படத்தில் அதர்வாவுடன் நடிக்கிறார். இதனை சற்குணம் இயக்குகிறார். பி.ஜி.முத்தையா ஒளிப்பதிவு செய்கிறார். கோலிசோடா அருணகிரி இசை அமைக்கிறார்.

செய்திகள், திரையுலகம்

நான் நடிச்சாலே படம் ஹிட்தான் என பில்டப் கொடுக்கும் லட்சுமிமேனன்!…

சென்னை:-பிரபுசாலமன் இயக்கிய கும்கி படத்தில் தமிழுக்கு அறிமுகமானவர் நடிகை லட்சுமிமேனன்.அவரது ஒவ்வொரு அசைவுகளும் அற்புதமாக இருப்பதாக பிரபுசாலமன் மற்றவர்களிடம் சொன்ன விசயம், சசிகுமாரின் காதுகளையும் எட்டியிருக்கிறது.அதனால், அப்போது தான் நடிக்கயிருந்த சுந்தரபாண்டியன் படத்துக்கும் லட்சுமிமேனனை புக் பண்ணினார். அந்த படத்தில் அவரது பர்பாமென்ஸ் பேசும்படியாக இருந்ததால் தனது அடுத்த படமான குட்டிப்புலியிலும் அவரையே நடிக்க வைத்தார் சசிகுமார். அதையடுத்து, விஷாலுடன் பாண்டியநாடு, நான் சிகப்பு மனிதன், விமலுடன் மஞ்சப்பை என பல படங்கள் லட்சுமிமேனன் நடிப்பில் வெளியாகியுள்ளன.ஆனால் இந்த படங்கள் அனைத்துமே ஹிட்டாகியுள்ளன. அதனால் அடுத்தபடியாக லட்சுமிமேன்ன நடிப்பில் வெளியாகயிருக்கும் ஜிகர்தண்டா, வசந்தகுமாரன், சிப்பாய் போன்ற படங்கள் ஹிட்டிக்கும் என்று அப்படக்குழுவினர் நம்பிக்கொண்டிருக்கின்றனர். இதனால், லட்சுமிமேனன் நடித்தாலே அந்த படம் எந்த காரணம் கொண்டு தயாரிப்பாளர்களின் கையை கடிக்காது என்பது கோலிவுட்டில் செண்டிமென்டாகி விட்டது. அதனால் தற்போது மலையாளத்தில் ஒரு படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் லட்சுமிமேனன், தனது கோலிவுட் செண்டிமென்டை அங்குள்ள சினிமாக்காரர்களிடம் சொல்லி மார்தட்டி வருகிறாராம். அதோடு, நான் நடிச்சாலே ஹிட்தான். அதனால் எனக்கான சம்பளத்தை கிள்ளிக்கொடுக்காமல் அள்ளிக்கொடுங்கள் என்று சொடக் போட்டுக் கேட்கிறாராம் லட்சுமிமேனன்.

செய்திகள், திரையுலகம்

யானையைத் தொடர்ந்து சிங்கத்தை வைத்து கதை பண்ணும் பிரபுசாலமன்!…

சென்னை:-மைனா ஹிட்டுக்குப்பிறகு விக்ரம் பிரபு நடிப்பில் பிரபுசாலமன் இயக்கிய படம் கும்கி. அந்த படத்தையடுத்து, தற்போது கயல் என்ற படத்தை இயக்கி வருகிறார். சுனாமியின் பாதிப்புக்கு உள்ளான பகுதியை இதில் அவர் கதைக்களமாக்கியிருக்கிறார். ஆனால், சுனாமி பேரலையினால் பாதிக்கப்பட்ட மனிதர்களைப்பற்றிய கதையா? இல்லையா? என்பதை சஸ்பென்சாக வைத்திருக்கிறார். இந்த படத்திற்கு பிறகு தனக்கென ஒரு தனி பாணியில் புதிய கோணங்களில் படங்களை இயக்க வேண்டும் என்று சதா யோசித்துக்கொண்டேயிருக்கும் பிரபுசாலமனுக்கு, கும்கியில் யானையை மையமாக வைத்து படமாக்கியது போன்று அடுத்து சிங்கத்தை மையமாக வைத்து ஒரு படம் பண்ணும் ஆசையும் உள்ளதாம். ஆனால் அந்த முயற்சியில் எப்போது இறங்குவது என்று இன்னமும் முடிவெடுக்கவில்லையாம். கயல் படத்தின் ரிலீசுக்குப்பிறகுதான் உறுதியான முடிவெடுக்க உள்ளாராம்.

Scroll to Top