தூவானம் தூவ தூவ – Thoovaanam Tamil Lyrics

தூவானம் தூவ தூவ – Thoovaanam Tamil Lyrics post thumbnail image

தூவானம் தூவ தூவ
மழை துளிகளில் உன்னை கண்டேன்

என் மேலே ஈரம் ஆக உயிர் கரைவதை
நானே கண்டேன்

கடவுள் வரங்கள் தரும் பல கதை கேட்டேன்
அவரே வரமாய் வருவதை இங்கு பார்த்தேன்

வேறு என்ன வேண்டும் வாழ்வில்

தூவானம் தூவ தூவ
மழை துளிகளில் உன்னை கண்டேன்

குயிலென மனம் கூவும்
மயிலென தரை தாவும்
என்னோடு நீ நிற்கும் வேளையில்

புழுதியும் பளிங்காகும்
புழுக்களும் புனுகாகும்
கால் வைத்து நீ செல்லும் சாலையில்

யார் தீங்கு செய்தாலும் மன்னிக்க தோன்றும்
நீ தந்த இம்மாற்றம் என் வெட்கம் தூண்டும்

காதல் வந்தால் கோபம் எல்லாமே
காற்றோடு காற்றாக போகின்றதே

தூவானம் தூவ தூவ
மழை துளிகளில் உன்னை கண்டேன்

இரவுகள் துணை நாடும்
கனவுகள் கடை போடும்

நீ இல்லை என்றால் நான் காகிதம்

விரல்களில் விரல் கோர்க்க
உதட்டினை உவர்ப்பாக்க
நீ வந்தால் நான் வண்ண ஓவியம்

நெஞ்சுக்குள் பொல்லாத ஆறேழு வீணை
ரீங்காரம்தான் செய்து கொல்கின்ற ஆணை

நீ தான் கை தூக்க வேண்டும் என் கண்ணே
கை நீட்டு தாலாட்டு கண் மூடுவேன்

தூவானம் தூவ தூவ
மழை துளிகளில் உன்னை கண்டேன்

என் மேலே ஈரம் ஆக
உயிர் கரைவதை நானே கண்டேன்

கடவுள் வரங்கள் தரும் பல கதை கேட்டேன்
அவரே வரமாய் வருவதை
இங்கு பார்த்தேன்

வேறு என்ன வேண்டும் வாழ்வில்

Movie Name: Romeo Juliet – 2015
Song Name: Thoovanam Thoova Thoova
Music : D Imman
Singers: Vishal Dadlani, Sunitha Sarathy
Lyricist: Thamarai
Music Credits: Sony Music

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி